states

ஊழியர்கள் ‘சாந்தமான’ நிறத்தில் உடையணிய மின்வாரியம் அறிவுரை

சென்னை, ஜூன் 29- மின்வாரிய ஊழியர்கள் சாந்த மான நிறத்தில் உடை அணிய வேண் டும் எனவும், சீருடை விதிகளை  கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வும் மின்வாரியம் அறிவுறுத்தி யுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப் பதாவது: பெண்கள், சேலை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து கொள்ளலாம். பணியில் உள்ள ஆண்கள், பார்மல் பேண்ட், வேட்டி மற்றும் தமிழக, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம். கேசு வல் உடை அணியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அல்லது தீர்ப் பாயத்தில் ஆஜராக வேண்டியி ருந்தால், முழுக் கையுடன் கூடிய சிறியளவில் பட்டன் வைத்த கோட்  அணிய வேண்டும். பட்டன் இல்லாத  கோட் அணிய ஊழியர் விரும்பி னால் கண்டிப்பாக டை அணிய வேண்டும். உடையின் நிறமும், டிசைனும் சாந்தமான வகையில் இருக்க வேண்டும். பெண்களைப் பொறுத்த வரை சாந்தமான நிறத்தில் துப்பட்டா வுடன் சுடிதார், சேலை போன்ற வற்றை அணியலாம். அலுவல கத்தின் கண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்த உத்தரவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை மீறு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.