கோதாவரி ஆற்றைத் தடுத்து ரூ. 1 லட்சம் கோடியில் கட்டப்பட்ட காலேஸ்வ ரம் அணையின் தூண்கள் சரிய, தெலுங்கானா அரசின் பல்வேறு தவறுகளே காரணம் என தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதி அமைச்சகம் புதிய தேர்தல் பத்திர விற்பனை நவம்பர் 6-ஆம் தேதி முதல் நவம்பர் 20 வரை (பதினைந்து நாட்கள்) நடைபெறுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மஹாதேவ் சூதாட்டச் செயலியை ஒன்றிய அரசு தற்போது வரை ஏன் தடை செய்ய வில்லை. சூதாட்ட செயலி உரிமையாளர்களுக் கும், பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என பிரதமர் மோடிக்கு சத்தீஷ்கார் முதலமைச்சர் பூபேஷ் பகேல் கேள்வி எழுப்பி யுள்ளார்.
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அங்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என திருவனந்தபுரம் ஆய்வகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து 6.65 லட்சம் அரவணை டின்களை அழிக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜேசுராஜ் என்பவரை கைது செய்வதற்காக சனிக்கிழமையன்று வாலிநோக்கம் காவல்துறையினர் சென்றதாகவும் அப்போது காவலர் காளிமுத்துவை (35) குற்றச்சாட்டிற்கு உள்ளான நபர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த காவலர் காளிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டி.ஐ.ஜி., துரை, காவல்துறை கண்கா ணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தில்லியின் அவந்திகா அருகே விஷ்ராம் சௌக் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு மின்சா ரப் பேருந்து ஒன்று சாலையில் இருந்த வாக னங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில், ஒருவர் பலியானார். இதில் ஓட்டுநர் கைது செய்யப் பட்டார்.
தில்லியில் காற்றின் தரம் மோசமடைவதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் 517 குழுக்களை அமைத்துள்ளது.