மணிப்பூர் போல அசாமையும் வன்முறை பூமியாக்க பாஜக திட்டம்?
பாஜக ஆளும் அசாம் மாநில முதல்வராக இருப்பவர் ஹிமந்த பிஸ்வா சர்மா. இவர் மக்களவை தேர்தல்பிரச்சாரத்தில் இருந்துதற்போது வரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார். 3 நாட்களுக்கு முன்பு அவர், “1951இல் அசாமில் 12% ஆக இருந்த முஸ்லிம் மக்கள்தொகை தற்போது 40% ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு பெரிய பிரச்சனை” எனக் கூறினார். தொடர்ந்து வெள்ளியன்று ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,“அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. 2041க்குள் அசாம் முஸ்லிம் களின் பெரும்பான்மையாக உள்ள மாநில மாக மாறும். அசாமில் ஒவ்வொரு 10 வரு டங்களுக்கும் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 30% அதிகரித்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்துக்க ளின் மக்கள்தொகை 16% மட்டுமே அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரங்க ளின்படி அசாமின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் இப்போது 40% ஆகிவிட்ட னர். முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் பிராண்ட் அம்பாசிடராக ராகுல் காந்தி மாறினால், அது கட்டுப்படுத்தப்படும். ஏனெனில், அந்த சமூகம் அவர் சொல்வ தை மட்டுமே கேட்கிறது” என அவர் கூறி னார். மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இது இந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். அதா வது மணிப்பூர் மாநிலத்தில் குக்கி - மெய்டெய் மக்களிடையே வன்முறையை தூண்டியது போல, அசாமில் இந்து - முஸ்லிம் மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து வன்மத்தை கக்கியுள்ளார்.
ஹரியானா தேர்தல் பணியில் கெஜ்ரிவால் மனைவி
மதுபான கொள்கை வழக்குத் தொ டர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப் பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வுள்ள ஹரியானா சட்டமன்ற தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு பதிலாக அவரது மனைவி சுனிதா தேர்தல் பணியை கவனிப் பார் என ஆம் ஆத்மி கட்சியின் ஹரியானா மாநிலத் தலைவர் சுஷில் குப்தா அறி வித்துள்ளார். கெஜ்ரிவால் மனைவி சுனிதா சனியன்று பஞ்ச்குலாவில் உள்ள டவுன் ஹாலில் “கெஜ்ரிவாலின் உத்தரவா தங்கள்” என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் இடங்கள் அறிவிப்பு!
சென்னை, ஜூலை 19 - தமிழ்நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வரு கின்றனர். இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக் கான இடங்கள் அதிகரிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி 2024-25 ஆம் கல்வி யாண்டில், பொறியியல் படிப்புகளுக்கு கூடுதலாக 20 ஆயிரத்து 040 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இள நிலை பொறியிய லில் புதிதாக 8 பாடங் களும், முதுநிலை பொறியியலில் புதி தாக 10 பாடங்களும் சேர்க்கப்பட்டுள் ளன. மேலும் டிரெண்டிங் படிப்புகளாக மாறிவரும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கணினி அறிவியல் சார்ந்த 15 பாடப்பிரிவுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கி யுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.