ராமரின் தொடைமீது ஏறி நின்ற பாஜக எம்எல்ஏ!
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவ கல்யாண் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் சரணு சால்கர். இவர் ராம நவமி பண்டிகையை முன்னிட்டு தனது ஆதரவாளர்களு டன் சுமார் 12 அடி உயரம் கொண்ட ராமர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றுள்ளார். அப்போது ஏணிப்படி இல்லாததால், ராமர் சிலை மீதே காலால் மிதித்து ஏறிய எம்எல்ஏ சரணு சால்கர், ராமரின் தொடை மீது நின்று கொண்டு சிலைக்கு மாலை அணிவித்துள் ளார். ராமர் தொடை மீது நின்று கொண்டு ராமர் சிலையை கட்டிப்பிடித்தவாறு புகைப் படத்திற்கும் போஸ் கொடுத்துள்ளார். பின்னர், ராமருக்கு கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் நடனமாடியுள்ளார்.
போபால் - தில்லி ‘வந்தே பாரத்’ துவக்கம்
மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்றுள்ள பிரதமர் மோடி, ஒருங்கி ணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து தில்லி - போபால் இடையேயான நாட்டின் 11-அவது ‘வந்தே பாரத்’ ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை மத்தியப் பிரதேச மாநிலம் ராணி கமலாபதி ரயில் நிலையம் முதல் தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.
ராகுல் மீது புதிதாக அவதூறு வழக்கு
இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது, கடந்த ஜனவரி 9 அன்று ஹரி யானாவின் ஹரிதுவார் பகுதியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “21-ஆம் நூற்றாண்டின் கவுரவர்கள் காக்கி அரைக்கால் சட்டைகளை அணிந்து கொண்டு, இந்துப் பள்ளிகளை நடத்தி கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் 2 முதல் 3 பணக்காரர்கள் உள்ளனர்” என விமர்சித்தார். இதற்காக, ஆர்எஸ்எஸ்-ஸை சேர்ந்த கமல்பதாரியா, ஹரித்துவார் நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் ஏப்ரல் 12-இல் விசாரணை நடத்தப்பட உள்ளது. மோடி அவதூறு செய்ததாக பீகார் மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்றமும் ராகுலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு ரூ. 2,500
சத்தீஸ்கரில், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வேலையில்லாமல் தவிப்போ ருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மின் இணைப்பு: மலை மக்களுக்கு முன்னுரிமை!
வால்பாறை தொகுதியிலுள்ள ஆதிதிராவிட மற்றும் மலைவாழ் மக்களின் கிணறுகளுக்கு முன்னு ரிமை அடிப்படையில் இலவச மின் சாரம் வழங்கப்படுமா? என அதிமுக உறுப்பினர் அமுல் கந்தசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “2016-17 ஆம் ஆண்டுக்கு பிறகு, நான்கு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தாட்கோ, ஜீவன்தாரா திட்டங்களின் கீழ் ஒரு மின் இணைப்பு கூட வழங்கவில்லை. அதன் பின்னர் தற்போது, ஒரே ஆண்டில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விண்ணப் பதாரர்கள் அனைவருக்கும் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த முன்னுரிமையை பயன் படுத்திக் கொள்ளலாம்”என்றார்.
7 கோவில்களில் ராஜகோபுரம்!
நன்னிலம் தொகுதி அதிமுக உறுப்பினர் காமராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, “ 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 47 கோவில்களில் குடமுழுக்குக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 118 கோவில்கள் பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் 7 கோவில்களில் ராஜகோபுரம் கட்ட ரூ.36 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
வார்டு மறுவரையறை: குழு அமைப்பு
திருச்செங்கோடு நகராட் சிக்குட்பட்ட வார்டுகள் மறுவரையறை செய்யப் படுமா? என்று உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பி னர். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டு மறுவரையறை செய்வதற்கு முதலமைச் சரிடம் அனுமதி பெற்று குழு அமைக்க உள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் நடை பெறும். அதேபோல் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைத்து இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்”என்றும் அவர் கூறினார்.
கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக பஞ்சாரா மக்கள் தொடர் போராட்டம்!
ஷிமோகா, ஏப்.1 - கர்நாடக மாநில பாஜக அரசானது, சட்டப்பேரவைத் தேர்தலை மனத்தில் வைத்து, அண்மையில் வகுப்பு அடிப்படை யிலான இடஒதுக்கீடுகளில் பல்வேறு மாறுதல்களை செய்தது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக அரசு, இந்த 4 சதவிகிதத்தை ஒக்க லிக கவுடா, லிங்காயத் ஆகிய பிரிவின ருக்கு தலா 2 சதவிகிதம் என பிரித்துக் கொடுத்தது. முஸ்லிம்களை உயர்சாதி ஏழை களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்குள் கொண்டுசென்று பிராமணர்கள், வைசி யர்கள், முதலியார்கள், ஜெயின் உள்ளிட்ட சமூகத்தினருடன் போட்டியிட்டுக் கொள்ளு மாறு கூறிவிட்டது. மறுபுறத்தில், பட்டியல் வகுப்பின ருக்கான 17 சதவிகித இடஒதுக்கீட்டையும் பட்டியல் சாதியின் இடது பிரிவினருக்கு 6 சதவிகிதம், பட்டியல் சாதியின் வலது பிரி வினருக்கு 5.5 சதவிகிதம், தீண்டத்தகுந்த வருக்கு 4.5 சதவிகிதம், பட்டியல் சாதிப்பிரி வில் உள்ள மற்றவர்களுக்கு 1 சதவிகிதம் என உள்ஒதுக்கீடு செய்தது.
இதற்கு பட்டியல் வகுப்பிலுள்ள பஞ்சாரா பிரிவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மார்ச் 27 அன்று சிகாரிப்புராவில் பேரணி நடத்திய அவர்கள், முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டின் முன்பு, மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் படங்கள் இருந்த பிளக்ஸ் பேனர்கள், கொடிகளையும் கிழித்துத் தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 10 போலீசார் காயம் அடைந்தனர். இந்நிலையில், பஞ்சாரா பிரிவு மக்கள், வியாழனன்றும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். கர்நாடக பட்டியல் வகுப்பில் இடம்பெற்றுள்ள எண்ணிக்கையில் குறைந்த சமூகங்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கும், நீதிபதி சதாசிவா அறிக்கையை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஷிமோகா - பத்ராவதி சாலை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பஞ்சாரா மற்றும் போவி மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, சாலையின் நடுவே டயரைக் கொளுத்திப் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உலகச் செய்திகள்
ஈக்குவடாரின் ஜனாதிபதி கில்லர்மோ லஸ்சோவுக்கு க்கு எதி ரான பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வருவதற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற நிர்வாகக் கவுன்சில் ஒப்புதல் தெரிவித்துள் ளது. இந்தக் கவுன்சிலில் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஆறு பேர் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவளித்தனர். ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தார். கண்காணிப்புக்குழு இதைப் பரிசீலனை செய்யும். பின்னர் ஜனாதிபதிக்கு வாய்ப்பு தரப்படும். மூன்று மாத காலம் வரையில் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வரையில் எந்தவொரு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் இந்த அளவுக்கு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகவில்லை என்ப தால், டொனால்டு டிரம்ப் மீதான வழக்கு பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தகவலை வெளியிடாமல் வைத்துக் கொள்வ தற்காக திரைப்பட நடிகை ஒருவருக்கு லஞ்சம் கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை தான் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
நெதர்லாந்து நகரமான தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஈரான் வரவேற்றுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அமெரிக்கா முடக்கியிருந்தது. இதற்கு எதிராக ஈரான் தொடுத்திருந்த வழக்கில், சொத்துக்களை முடக்கியது சட்ட விரோதமானது என்றும், அவற்றை விடுவிப்பதோடு மட்டுமல்லா மல் ஈரானுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சட்டவிரோதமாக தனிப் பட்ட தரவு சேகரிப்பு மற் றும் பயனர்களின் வயதை சரிபார்க்க இயலாமை காரணமாக சாட்ஜிபிடி (ChatGPT) சேவையை தற்காலிகமாக நிறுத்து வதாக இத்தாலி நாடு அறி வித்திருந்த நிலையில், தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சேக ரித்த விவகாரத்தில் சாட்ஜிபிடி 20 நாட்க ளுக்குள் விளக்கம் அளிக்க இத்தாலியின் தனியுரிமை கண்கா ணிப்பு அமைப்பு உத்தர விட்டுள்ளது. விளக்கம் அளிக்கவில்லை என் றால் 20 மில்லியன் யூரோ (ரூ.178 கோடி) அபராத மாக செலுத்த வேண்டும் என இத்தாலி சாட்ஜிபிடி நிறுவனத்திற்கு எச்ச ரிக்கையும் விடுத் துள்ளது.
தில்லியில் புதிய நாடா ளுமன்ற கட்டிடத்தில் தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் நிகில் மெர்ச்சன்ட் ஆகியோ ருக்கு சிறப்பு அறைகள் உள்ளதா? பாஜகவில் மாற விரும்பும் வேறு கட்சி தலைவர்களுக்காக கட்டிடத்தின் அடித்தளத் தில் நாணயத்தால் இயக்கப்படும் “வாஷிங் மெஷின்” தளம் இருக் குமா? என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மூச்சுக்குழாய் அழற்சி நோய்த்தொற்று காரண மாக இத்தாலியின் ரோம் ஜெமெல்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் சனியன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவ ரும், முன்னாள் எம்பி-யு மான மகன்சிங் சோலங்கி காங்கிரசில் இணைந்தார்.