states

வாக்காளர்களுக்கு பெட்டிப் பெட்டியாக மதுபாக்கெட்டுகளை இறக்கிய சி.டி. ரவி!

சிக்கமகளூரு, மார்ச் 29 - சிக்கமகளூருவில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் வைத்திருந்த சி.டி. ரவி எம்எல்ஏ-வின் உருவப்படம் அச்சிடப் பட்ட காலண்டர்கள் மற்றும் மதுபாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, ஆளும் பாஜக-வினர் எப்படியா வது மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என பணத்தை கொட்டி இறைத்து வருகின்ற னர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்தே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட் களை வீடு, வீடாக வழங்கி வருகின்றனர். காங்கிரஸ் ஒரு ஓட்டுக்கு ரூ. 3 ஆயிரம்  கொடுத்தால், நாங்கள் ரூ. 6 ஆயிரம் தரத் தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏ-வுமான ரமேஷ் ஜர்கிஹோலி பகிரங்கமாகவே அறிவித்தார். ராணிபெண்ணூர் தொகுதி வாக்கா ளர்களுக்கு விநியோகிப்பதற்காக, கர்நாடக மாநில பாஜக சட்டமேலவை உறுப்பினர் ஆர். சங்கரின் வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 6 ஆயிரத்திற்கும் அதிகமான சேலைகள், 9 ஆயிரத்திற்கும் அதிகமான பேக்குகள், 2,500 குக்கர்கள் என சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் கடந்த மார்ச் 15 அன்று பிடிபட்டது. இந்நிலையில்தான் சிக்கமகளூரு டவுன் கடூர் சாலையில் உள்ள ஏஐடி சர்க்கி ளில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை சோத னையிட்டபோது, அதில், பெட்டி, பெட்டி யாக மது பாக்கெட்டுகள் மற்றும் சி.டி.ரவி எம்எல்ஏ உருவப்படம் அச்சிடப்பட்ட கால ண்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கார் ஓட்டுநர் தப்பியோடி விட்ட நிலையில், காரில் இருந்த மது பாக்கெட்டு கள், காலண்டர்கள் மற்றும் கார் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ள னர்.