‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மாவட்டத்தில் ‘நடை - பயணம்’ மேற்கொண்டு வரும் நிலையில், அவரிடம் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது குறித்து செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். எப்போதும் வீராப்பாக பேசும் அண்ணாமலை, இந்தக் கேள்விக்கு “நான் இதுகுறித்து பிறகு பேசுகிறேன். யாத்திரையின் போது அரசியல் பேசமாட்டேன்” என நழுவி ஓடியுள்ளார். “தேசிய தலைமை முடிவு” என்றும் சமாளித்துள்ளார்.