மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை, அக்.5- அக்டோபர் 5 அன்று திமுக எம்.பி ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய விசாரணை அமைப்புக்களின் இந்த ரெய்டுகளை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அர சியலுக்கு எல்லையே இல்லை எனத் தெரி கிறது. சுதந்திரமான புலனாய்வு அமைப்பு களை தனது அரசியல் தேவைக்காக தவ றாகப் பயன்படுத்தி வருகிறது” என்று குறிப் பிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் கண்டனம் “குறிப்பாக ‘இந்தியா’ கூட்டணி தலை வர்களை முடக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல் என்பது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல். சமீபத்தில்தான் அம லாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் கண் டித்திருந்தது. அதாவது, நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. மக்கள் பிரச்சனைகள் என்னாச்சு? ஆனால் கள நிலவரமோ சட்டத்தையும், ஜனநாயகத்தையும் மதித்து நடப்பதை போலத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நாளுக்கு நாள் பலமடைந்து வரு வதை கண்டு பாஜக அச்சமடைவது இதன் மூலம் நன்றாகத் தெரிகிறது. இத்தகைய பழி வாங்கும் அரசியலை விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 4 அன்று ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அவரைக் கைது செய்த னர் என்பது குறிப்பிடத்தக்கது.