தெலுங்கானா மாநி லத்தில் வரும் நவம்பர் 30 அன்று சட்டமன்ற தேர்தல் நடை பெற இருக்கிறது. ஆளும் பிஆர்எஸ்-காங்கிரஸ் கட் சிக்கு கடும் போட்டி இருக் கும் என்றும், பாஜக கனவு பலிக்காது என்றும் பெரும் பாலான கருத்துக்கணிப்பு கள் தங்களது முடிவுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், தெலுங் கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ள நிலை யில், 52 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டி யலை பாஜக ஞாயிறன்று வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் கோஷாமஹால் எம்எல்ஏ-வும், மத வன்முறையை கிளப்பும் பேச்சிற்கு புகழ் பெற்றவருமான ராஜா சிங்கை மீண்டும் வேட்பாள ராக களமிறக்கியுள்ளது பாஜக. ராஜா சிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் “இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு” எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிறை சென்று நவம்ப ரில் ஜாமீனில் வெளியே வந் தார். ராஜா சிங்கின் பேச்சை கண்டிப்பதாக கூறி அவரை பாஜக மேலிடம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில், தெலுங் கானா தேர்தலில் மதவெறி யை தூண்டும் வகையில் ராஜா சிங்கின் சஸ்பெண்ட் உத்தரவை பாஜக ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் ஜி.கிஷன் ரெட்டி அறிக்கையாக வெளியிட்டார்.