தில்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக
புதுதில்லி, டிச. 4- தில்லி மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 4 ஞாயிறன்று நடைபெற்றது. மொத்தம் 1.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 250 வார்டுகளிலும், 13,638 வாக்குச்சாவடி களிலும் 1349 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். 7 ஆம் தேதி முடிவு தெரியும். பாஜக தனது 15 ஆண்டுகால ஆட்சி க்கு எதிராக கடுமையான மக்கள் உணர் வை எதிர்கொண்டு பெரும் தோல்வியை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. எஸ்டிஎஸ்-லோக் நீதி கருத்துக்கணிப்பு, ஆம் ஆத்மி கட்சி பாஜகவை விட சாதி இந்து வாக்குகளில் 6 சதவிகித வாக்குக ளைப் பெற்று அதிக இடங்களைப் பெறும் என்று கணித்துள்ளது. கெஜ்ரி வால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் கடைபிடித்த மென்மையான இந்துத்துவா நிலைப்பாடு பலனளித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வ தில் கவனம் செலுத்திய காங்கிரஸால் தனது நிலையை உயர்த்த முடியுமா என்பது தான் முக்கிய கேள்வி. முக்கிய தேசிய தலைவர்கள் யாரும் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவில்லை. சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் 17 இடங்க ளில் போட்டியிடுகின்றன. சிபிஎம் 6, சிபிஐ 3, சிபிஐ எம்எல் 5, பார்வர்டு பிளாக் 3 இடங்களில் போட்டியிடுகின்றன.
அதிமுகவின் கடைசி 4 ஆண்டுகால ஆட்சி தமிழகத்தின் பேரிடர்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை, டிச. 4- 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து ள்ளார். சென்னை அடுத்த மாமல் லபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால அதி முக ஆட்சியில் பாழாகிப் போன நிதி நிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங் களை எல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறோம். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி முழு வதையும் சீரழிவு என்று சொல்லிவிட முடியாது. முதல் 6 ஆண்டுகள் சீரழிவு, கடைசி 4 ஆண்டுகள் தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்றுதான் சொல்ல வேண்டும். 196க்கு முன் சீர்திருத் தத் திருமணங்கள் சுயமரி யாதை உணர்வோடு நடை பெறுகிறது என்றால், அதை கேலி செய்தவர்கள், கிண்டல் செய்தவர்கள், விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் நாட்டில் உண்டு. ஆனால் இன்றைக்கு, சீர் திருத்தத் திருமணம் நடக்கி றது என்றால் யாரும் ஆச்சரி யப்படுவதில்லை. அந்த அள விற்கு இன்றைக்கு பிர பலமாக சீர்திருத்தத் திரு மணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.
தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்க! இஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு சிஐடியு வலியுறுத்தல்
சென்னை, டிச.4- கரூர் மாவட்டம் புகளூரில் இஐடி பாரி சர்க்கரை ஆலை சுமார் 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இத் தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்றும், அந்த பணியிடங்களைப் பூர்த்தி செய்யும் வகை யில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. மேலும், வெளி மாவட்டங்களில் மூட ப்பட்ட பாரி கம்பெனிகளில் வேலை பார்த்த அதிகாரிகளை புகளூர் ஆலைக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் செய்கின்ற வேலை யைச் செய்யச் சொல்லி நிர்ப்பந்திக்கின்றனர். அது மட்டுமல்ல ஒரே வேலையைச் செய் கின்ற தொழிலாளிக்குக் குறைந்த சம்பள மும், அதிகாரிகளுக்கு அதிகமான சம்பள மும் கொடுத்து வருகின்றனர். மேலும், கடந்த 8 ஆண்டுகளாக ஊதிய மாற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தாமல் காலம் கடத்தி வருவது தொழிலாளர்கள் மத்தி யில் பெரும் கொந்தளிப்பாக மாறியுள்ளது. இது தவிர ஆலையில் உள்ள முதலுதவி மையத்தில் முறையான மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ கிடையாது. இதனால் வேதனையுற்ற தொழிலாளர்கள் மேற்கண்ட பிரச்சனைகளை வலியுறுத்தி ஜன நாயக ரீதியாகப் போராடிய போது நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு-3, தொமுச-2, என்ற முறையில் ஐந்து தொழிற் சங்க தலைவர்களைத் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, இதனை எதிர்த்து டிச.1ஆம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர், அரவை துவங்க உள்ள நிலையில் ஒரு பதட்டமான சூழ் நிலை உருவாகியுள்ளது. எனவே, நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனையில் தலை யிட்டு தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, ஊதிய மாற்றுப் பேச்சுவார்த்தை யைத் துவங்கவேண்டும் என வலியுறுத்துவ தோடு, தமிழக அரசும் நிர்வாகத்தோடு பேசி சமூக தீர்வு ஏற்படுத்த முன்வர வேண்டுமென சிஐடியு தமிழக அரசை வற்புறுத்துவதாக மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
சேலம், டிச. 4- விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒப்பந்த மேற் பார்வையாளரின் உடல் உறுப்புகள், நான்கு மருத்து வமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம் மல்லூர் பகு தியை சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் மணிகண்டன் (26). இவர், சேலம் சேகோ சர்வில் ஒப்பந்த அடிப்படை யில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 30ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த டேங்கர் லாரி மணிகண்டன் மீது மோதி யது. இதில் பலத்த காய மடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மூளைச்சாவு அடைந்ததாக உறவினர் களிடம் மருத்துவர்கள் தெரி வித்தனர். மேலும், அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் சிலர் உயிர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரி வித்தனர். இதற்கு அவரின் பெற்றோர் சம்மதம் தெரி வித்ததையடுத்து, அவரது இருதயம் மற்றும் நுரை யீரல் சென்னையில் உள்ள இரண்டு தனியார் மருத்து வமனைகளுக்கும், கிட்னி யில் ஒன்று ஈரோட்டுக்கும் மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ள்ளதாக மருத்துவமனை முதல்வர் டாக்டர் சத்திய மூர்த்தி தெரிவித்தார். மக னின் உடல் உறுப்புகளை பார்த்து அவரது பெற்றோர்க ளும் உறுப்பினர்களும் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
டிசம்பர் 7 முதல் கனமழை: 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை, டிச. 4- வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் வரும் 7, 8 தேதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் திங்களன்று (டிச5) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும். பிறகு மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டியதெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். மேலும் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திங்கட்கிழமை (டிச. 5) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செவ்வாய்க்கிழமை (டிச. 6) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதன்கிழமை (டிச.7) தமிழக கடல் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடு துறை, தஞ்சாகூர், திருவாரூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை மாவட்டங் கள் மற்றும்காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருபெரும்புதூர், டிச.4- காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் அதிகாரிகள் பிச்சிவாக்கம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெளி மாநிலத்துக்கு கடத்தவிருந்த ஒருடன் ரேசன் அரிசி மூட்டை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒரு டன் ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் எடை எந்திரம் போன்றவை கைப்பற்றி திருபெரும்புதூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
ஆளுநரின் செயல் விந்தையாக உள்ளது: இரா.முத்தரசன்
திருவில்லிபுத்தூர், டிச.4- தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்தி கொண்டிருக்கிறார் என்று சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் கூறி யுள்ளார். திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் முத்தர சன் செய்தியாளர்களைச் சந் தித்தார். அவர் கூறியதாவது: “ஆன்லைன் சூதாட்டம் மூலம் 25 பேர் உயிரிழந்த நிலை யில் தமிழக அரசு சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்தி ருக்கிறது. அது குறித்து விளக் கம் கேட்பது என்கிற பெய ரால் காலம் தாழ்த்திக் கொண் டிருப்பது கண்டனத்திற்குரி யது. பிரதமர், குடியரசுத் தலைவர் வந்தால் பாது காப்புப் பணியை மேற்கொள் வது உள்துறை அமைச்ச கம் தான். ஆனால் பாது காப்பு குறைபாடு ஏற்பட்டி ருக்கிறது என்று பாஜக மாநி லத் தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித் துள்ளார். அண்ணாமலை மற்றும் ஆளுநர் ரவி ஆகி யோர் காவல்துறை அதிகாரி களாக இருந்தவர்கள். அவர் களுக்கு பிரதமர் பாது காப்பு குறித்த நடைமுறை தெரியும். ஆனால் தலை மைச் செயலாளரிடம் ஆளு நர் விளக்கம் கேட்டிருப்பது விந்தையாக உள்ளது. ஆளு நர் உள்துறை அமைச்ச கத்திடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆளு நர் தமிழ்நாடு அரசாங்கத் திற்கு எதிராக போட்டி அர சாங்கம் நடத்தி கொண்டி ருக்கிறார். ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ம் தேதி ராஜ் பவன் முன்பு முற்றுகை போராட் டம் நடத்த இருக்கிறோம்”. இவ்வாறு அவர் கூறி னார்.