states

இலவசப் பேருந்து திட்டத்தில் 91.85 கோடி மகளிர் பயன்: அரசு தகவல்

சென்னை,ஏப்.21- இலவசப் பேருந்து திட்டத்தில் பெண்கள்  91.85 கோடி பயணங்களை மேற்கொண் டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,“ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்கள் அனைவரும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று  அறிவிக்கப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட நகரப் பேருந்து களின் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இத்திட்டத் தின் மூலம் தற்போது வரை பெண்கள்  91 கோடி பணயங்களை மேற்கொண்டுள்ள னனர்” என்றார். பாதுகாப்பான பயணம் என்பது பெண்க ளின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பிறரை சார்ந்து இல்லாமல் பெண்கள், கல்விக் கூடங்களுக்கும், பணிக்கும் தாம கவே சென்று வருவதால் கட்டணமில்லா பேருந்து வசதி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்க ளின் பயணத்திற்கான அன்றாடச் செலவு கள் குறைக்கப்பட்டு கல்வி உணவு, உடை போன்ற அத்தியாவசிய செலவுகளை அவர்கள் மேற்கொள்வதற்கு இது வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகள் இல்லங்கள் அதிகம் உள்ள சென்னை, தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், மதுரை, கோவை ஆகிய ஆறு மாவட்டங்களில் அந்த குழந்தை கள் பயன்பெறும் வகையில் வாழ்வியல் வழி காட்டும் மையங்கள் அமைத்து கொடுக்கப் படும். சமூக நலன் சமூக பாதுகாப்பு மற்றும்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல் படுத்தப்படும் திட்டங்கள் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும்  அமைச்சர் அறிவித்தார்.