states

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

சென்னை, டிச.1 - வடகிழக்கு பருவமழை  மற்றும் புயல் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பாதிப்புகளை சரி செய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோ சிக்கப் பட்டது. மேலும் உரிய  நடவடிக்கைகள் மேற் கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். முதலமைச்சர் பேசியதா வது:- புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும். புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடு களை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கா தவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதிக்கப் படக் கூடிய மக்களுக்கு எச்சரிக்கை வழங்க நிவா ரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

முகாம் களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும். மழையின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து காவலர்கள் செயல்பட வேண்டும். போக்குவரத்து காவலர்கள் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சமை யல் கூடங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். அரசு மருத்துவ மனை களில் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேர மும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். மழைக் காலங்களில் மின்சார விபத்துக்கள் ஏற்படாத வகையில் மின் சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த தேவை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அமைச்சர்கள் தலைமைச் செயலாளரிடம் உதவிகளை பெற்றுக்கொள் ளலாம். அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. புயலால் ஏற்படும் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.