states

ஒன்பது மாநிலங்களில் உள்ள வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.48,262 கோடி

புதுதில்லி, ஜூலை 30- ஒன்பது மாநிலங்களில் உள்ள வங்கிகளில் ரூ.48,262 கோடி பணத்தை உரிமை கோர ஆளில்லை. இதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  வங்கிகளில் வைப்பு முதிர்வுத் தொகை மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை பத்து ஆண்டு களுக்கு மேல் எடுக்காமலிருந்தால் அவற்றை உரிமை கோரப்படாத பண மாக வகைப்படுத்துகின்றனர். அந்த  வகையில் கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.48,262 கோடி பணம் இந்திய வங்கிக ளில் உரிமை கோரப்படாமல் உள்ளது.  இந்தத் தொகையில் பெரும்பான் மையான பணம் எட்டு மாநிலங்களிலி ருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவை தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாட கா, பீகார் மற்றும் தெலுங்கானா-ஆந்திரா மாநிலங்கள் ஆகும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, பத்து ஆண்டுகளாகச் செயல்படாத சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் இருக்கும் தொகை, மேலும் முதிர்வடைந்த டெபா சிட்கள் ஆகிய தொகையை டெபா சிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும். இருப்பினும் பின்னாளில் டெபாசிட் செய்தவர்கள் தங்கள் பணத்தை வட்டியுடன் பெற உரிமை உண்டு. வங்கி டெபாசிட்டுகள் குறித்து குடும்பத்தினருக்குத் தகவல் தெரி விக்காமல் விடுவது, பல்வேறு வைப்புத்  தொகை இருக்கும் போது ஒன்றை மறந்துவிடுவது, வயது முதிர்ந்த தம்பதி யில் டெபாசிட் செய்தவர் இறந்து விட்டால் அவரது துணைக்கு எப்படிப் பணத்தைப் பெறுவது என வழிமுறை தெரியாமல் போவது போன்ற கார ணங்களால் இந்த உரிமை கோராத தொகை அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில் இந்த தொகை 39,264 கோடியாக இருந்தது. 2021-22ஆம் ஆண்டு இது சுமார் ரூ.9 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இதையடுத்து உரிமைகோரப்படாத தொகை அதிகமுள்ள மாநிலங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.