புதுதில்லி, மே 18- ஷீனா போரா கொலை வழக்கில் கைதான இந்தி ராணி முகர்ஜிக்கு உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கி யுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலை மைப் பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியின் மனைவியாக இருந்தவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா பாராவை கொலை செய்த தாக 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மும்பை பைகுல்லா சிறைச்சாலை யில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்தி ராணி முகர்ஜி உச்சநீதிமன் றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இவ ரது ஜாமீன் மனுவை புத னன்று விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், ‘‘இந்தி ராணி முகர்ஜி சிறையில் 6.5 ஆண்டுகளைக் கழித்துள் ளார். எனவே, அவருக்கு பிணை வழங்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.