உச்சநீதிமன்றம் கருத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சென்னை,ஏப்.29- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் பிணை மனு மீதான விசா ரணையில் வழக்கின் தன்மை குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து முற் றிலும் அநாவசியமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள் ளது. இதனை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தாமதமின்றி குற்றப்பத்திரிகை யை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு உரிய தண் டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர ணம் தொடர்பான வழக்கில் குற் றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டிருந்த பள்ளியின் தாளா ளர், செயலாளர், முதல்வர் உள் ளிட்ட ஐந்து பேரை கடந்த 29.8. 2022 அன்று சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட வர்கள் அனைவருமே நிரபராதி கள் எனவும், அவர்கள் அனை வரும் எவ்வித முகாந்திரமுமின்றி கைது செய்யப்பட்டது தேவையற்றது என்றும், மாணவி யின் மரணத்தில் எவ்வித சந்தே கத்திற்கும் இடமே இல்லை என வும், அது தற்கொலை தான் என்றும் குறிப்பிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத் தின் இந்தக் கருத்துக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆட்சேபணையை தெரிவித்தது டன், பிணை மனுவினை விசாரிக் கும் போது வழக்கு தொடர்பான தகுதி (மெரிட்ஸ்) குறித்து விவா திக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டியும், முழு மையான விசாரணைக்கு முன்ன தாகவே நீதிமன்றம் இம்முடிவுக்கு வந்துள்ளது குற்றவியல் நடை முறைக்கு எதிரானது என்றும், சிபி சிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்படுவ தற்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுகளுக்கு வந்திருப்பது அந்த வழக்கின் விசாரணையை சிதைக்கும் என்றும் கருத்து தெரி வித்தது. சென்னை உயர்நீதிமன்றத் தின் இந்த கருத்துக்கு ஸ்ரீமதியின் பெற்றோரும் கடும் ஆட்சேபணை யை தெரிவித்ததுடன், இக்கருத்து கள் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டி, பிணையை ரத்து செய்ய வேண்டு மென உச்சநீதிமன்றத்தில் வழக் கும் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் “உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் பிணை வழங்கப்படலாமா, வேண்டாமா என்பது குறித்து மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்றும்,
உயர்நீதிமன்ற நீதிபதி பிணை மனு மீதான விசாரணை யில் வழக்கு தொடர்பான தகுதி கள் (மெரிட்ஸ்) குறித்து இந்தள வுக்கு விவாதித்திருப்பது முற்றி லும் அநாவசியமானது என்று கூறி யுள்ளனர். மேலும், பிணை மனு மீதான விசாரணையின் போது, வழக்கு குறித்து விரிவாக விவாதிக்கக் கூடாது என்பது ஏற்கனவே சட்ட ரீதியாகத் தெளிவுபடுத்தப்பட்ட விஷயம் என்பதைத் தெளிவு படுத்திய உச்சநீதிமன்றம், இந்த வழக்கு குறித்து உயர்நீதிமஙன றம் தெரிவித்த எந்த கருத்துகளை யும் பிரதான வழக்கு விசாரணை யின்போது விசாரணை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள் ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இப்பின்னணியில் ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல் துறையினர் எந்த அழுத்தத்திற் கும் இடம் தராமல் நேர்மையான முறையில் விசாரணையை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வ துடன், குற்றமிழைத்தோருக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.