கோயம்புத்தூர், மார்ச் 26 - இடஒதுக்கீட்டில் படித்தவர் களை இழிவுபடுத்தும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டிக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தனது பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிற்படுத்தப்ப டோர் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பாஜக தலைவர் அண்ணா மலை என்றாலே பொய், பித்தலாட் டம், மோசடி, இழிவான பேச்சு என்ப தாகி விட்டது. கடையெழு வள்ளல்களில் ஒரு வரான வல்வில் ஓரியை, சுதந்தி ரப் போராட்ட வீரர் எனக் கூறியது துவங்கி, 1680-ஆம் ஆண்டே இறந்து போன சத்ரபதி சிவாஜி, 1967-இல் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார் என்று கூறி யது, 1963-ஆம் ஆண்டே தனது 9 ஆண்டுகால முதல்வர் பதவியை விட்டு காமராஜர் விலகிவிட்ட நிலை யில், 1963 முதல் 1975 வரை 13 ஆண்டுகள் காமராஜர் முதல்வராக இருந்தார் என்று கூறியது, உள் துறை அமைச்சராக இருந்த கக் கனை கல்வி அமைச்சராக இருந் தார் என கூறியது... இப்படி அண் ணாமலையின் உளறல்கள் ஏரா ளம். இந்நிலையில், அடுத்த பொய்யை எடுத்து விட்டுள்ளார். பொய் மட்டுமல்ல, இடஒதுக்கீட் டில் படித்தவர்களை எல்லாம் ‘கோட்டாவில் வந்தவன் அல்ல நான்’ என்று பேசி இழிவு படுத்தி யுள்ளார். இது தற்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்த அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்தி ரனை விமர்சித்தார். அப்போது, “சிங்கை ராமச்சந்திரன், அவங்க அப்பாவின் எம்.எல்.ஏ. கோட்டா சீட்டை பயன்படுத்தி கல்லூரியில் படித்தவர். ஆனால், இந்த அண் ணாமலை கோட்டா சிஸ்டத்துல வரலை” என்றார். “2002-இல் முதன் முதலாக நான் கோவைக்கு வந்தேன். பேண்ட் போட்டுகிட்டு எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-இல் கோவைக்கு வந்தேன். இது 22 ஆண்டுகளுக்கு முன்பு. அன் னைக்கு எனக்கு வயது 17. காந்தி புரம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை பிடித்து 2 தகரப் பெட்டியோடு பீள மேடு போய் இறங்குறேன். பீள மேட்டில் பிஎஸ்ஜி பொறியல் கல் லூரி முன்னாடி நானும் என்னுடைய தந்தையும் 2 தகரப் பெட்டியை வைத்து கொண்டு நின்றோம். நான் ஒண்ணும் கோட்டா (Quota) சிஸ் டத்துல சீட் வாங்கல.. கோட்டா சிஸ்டத்துல இந்த அண்ணாமலை வரலை.. கோட்டா சிஸ்டத்துல வானதி அக்கா வரலை.. கோட்டா சிஸ்டத்துல மோடி வரலை.. கோட்டா சிஸ்டத்துல இங்க யாரும் வரவில்லை..” என்று கூறி யுள்ளார்.
ஐபிஎஸ் ஆனதே கோட்டாவில் தான்
இதுதான் தற்போது கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் இடஒதுக்கீட்டில் படிக்கவில்லை என்று அண்ணாமலை கூறி யிருக்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், 2010-ஆம் ஆண்டு ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுப் பிரிவில்தான் ஐபிஎஸ் பணி யிலேயே அண்ணாமலை சேர்ந் துள்ளார். ஆனால், அதை மறைத்து, கோட்டா (Quota) சிஸ்டத்தில் நான் வரவில்லை என்று அப்பட்டமாக பொய் பேசி யுள்ளார். அடுத்ததாக, ‘கோட்டா சிஸ்டத்துல இந்த அண்ணாமலை வரலை..’ என்று கூறியதன், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் மீதான தனது இழிவான பார்வையை வெளிப்படுத்தி கொச்சைப்படுத்தி யுள்ளார். இதற்கு தற்போது கடும் கண்ட னங்கள் எழுந்துள்ளன. அண்ணா மலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஐபிஎஸ் பதவி கிடைத் ததே ஓபிசி (இதர பிற்படுத்தப் பட்டோர்) எனும் கோட்டாவில்தான் என்பதற்கான ஆதாரங்களை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அண்ணாமலையின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளனர். இடஒதுக்கீடு என்ற கோட்டா வில்தான் படித்தேன் என்று அண் ணாமலையே முன்பொரு பேட்டி யில் கூறியிருந்த வீடியோவும் தற்போது வைரலாகியுள்ளது.