அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
சென்னை,அக்.18- ஒன்றிய பாஜக அரசின் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலை வரிடம் கடந்த வாரம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிறு வனங்களில் கட்டாயம் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டு மென்றும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த அறிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த பரிந்துரைகள் அனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதி ரானவை என்றும், நாட்டின் பன்மொழி கட்டமைப்புக்கு தீங்கு விளை விப்பவை என்றும் முதல்வர் விமர்சித்தி ருந்தார். மேலும், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்தப் பரிந்துரை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று (அக்.18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
அதில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடி யரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கை நாடு முழுவதும் விவா தத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ் நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற் படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது. அந்தப் பரிந்துரைகளில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி., ஐஐஎம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கி லத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறு வனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழி யாக ஆக்கப்பட வேண்டும்; இளை ஞர்களின் வேலைவாய்ப்பில், கட்டா யத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வையும் அடங்கும்.
இப்படி ஆங்கிலத்தைப் புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்ட வணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளை யும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறி யாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத் தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதி ரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்ட மைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகை யில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது, நடை முறைபடுத்தக் கூடாது என பிரத மருக்கு 16.10.2022 அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த மாபெரும் அவையில் பேரறி ஞர் அண்ணா கொண்டு வந்து நிறை வேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மா னத்திற்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலு வல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப் பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப் பது கவலைக்குரியது.
அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழி யாக தொடர்ந்திட, அரசமைப்பு சட்ட த்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்க ளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ் நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவரால் கடந்த 9-9-2022 அன்று குடியரசுத் தலை வரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கை யில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி களுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலி யுறுத்துகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைத்து கட்சித் தலைவர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினர். பாஜக எதிர்ப்பு தெரி வித்தது. இதனைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.