states

ஆருத்ரா நிறுவனம் மேலும் ரூ. 300 கோடி மோசடி!

சென்னை, அக்.8- தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் பொது  மக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம்  ரூபாய் வட்டி தருவதாக கவர்ச்சிகர மான விளம்பரங்களை கூறி, மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, கடந்த மே மாதம்  24-ஆம் தேதி பொருளாதார குற்றப் பிரிவு காவலர்கள் தமிழகம் முழுவதும்  ஆருத்ரா கோல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இரு வரை கைது செய்தனர். ஆருத்ரா நிறுவனத்தில் சுமார் 90 ஆயிரம் பேர் ரூ. 2,125 கோடிக்கு முதலீடு செய்து முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்தது. மேலும், ரூ. 85 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு, சுமார் ரூ. 150 கோடி சொத்துக்கள் அடை யாளம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆருத்ரா  நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்க  ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.

அதன் அடிப்படையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானததில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் பின் சென்னை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளிக்கும் வசதி செய்யப் பட்டது.  செப்டம்பர் 30ஆம் தேதி வரைக்கும் மாநிலம் முழுவதிலிருந்தும் 1 லட்சத்து  8 ஆயிரத்து 920 பேர் ஆவணங்க ளுடன் புகார் அளித்தனர். இதனை கணக்கிட்டதில் மேலும் 300 கோடி ரூபாய் அதிகரித்து மொத்தமாக 2,425  கோடி வசூல் செய்தது தெரியவந்துள்ள தும் அம்பலமானது. இந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் ஆருத்ரா நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்க ளையும் கணக்கீடு செய்து வருவதாக வும், புகார் அளித்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்து தகுதி உடையவர்களுக்கு அவர்கள் முதலீடு  செய்த பணத்தை, ஆருத்ரா கோல்ட்  டிரேடிங் நிறுவனம் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக் களை விற்பனை செய்து சட்டப்படி முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்கும் பணி நடைபெறும் எனவும்  தெரிவித்துள்ளனர்.