ஹைதராபாத், ஜூன் 25- “தெலுங்கானா மாநிலத்தில் இந்துக் கோயில்கள் அல்லது இந்து மதம் சார்ந்த கட்ட டங்கள் உள்ள இடங்களில் மசூதிகள் அமைக்கப் பட்டதற்கான எந்த விதமான ஆதாரமும் இல்லை” என்று இந்தியத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவரும் கரீம்நகர் சட்ட மன்ற உறுப்பினருமான பண்டி சஞ்சய், மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசிக்கு அண்மையில் சவால் ஒன்றை விடுத்திருந்தார். அதாவது “மசூதிகள் கட்டப்பட்டுள்ள இடங்களைத் தோண்டினால் அங்கிருந்து இந்து மதம் சார்ந்த பொருட்களும், சிவலிங்கமும் கிடைக்கும்” என்று கூறிவிட்டு, “மசூதி இருக்கும் இடங்களை தோண்டும் போது உயிரற்ற உடல் களான ‘சவம்’ கிடைத்தால் மசூதிகளை இஸ்லா மியர்களே வைத்து கொள்ளலாம். அதுவே, ‘சிவம்’ சிவலிங்கம் எடுக்கப்பட்டால் அந்த இடங் களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்; இதற்கு ஒவைசி தயாரா?” என்று கேட்டிருந் தார். இதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. நாடு முழு வதுமே மசூதிகளைத் தோண்டிப் பார்க்க வேண் டும் என்று பாஜக தலைவர்கள் பேச ஆரம்பித்த னர்.
இதனிடையே, “தெலுங்கானாவில் இந்து மதம் சார்ந்த தலங்களில் மசூதி அமைக்கப் பட்டுள்ளதா?” என்று இந்தியத் தொல்லியல் துறையிடம் சமூக செயற்பாட்டாளர் ராபின் ஷாச்செயூஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்திய தொல்லியல் துறையின் ஹைதராபாத் வட்டத்தைச் சேர்ந்த மத்திய பொதுத்தகவல் அதிகாரி (CPIO) கையொப்ப மிட்டு பதிலளித்துள்ளார். அதில், “தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் வட்டம், இந்திய தொல்லியல் துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட எந்த நினைவுச் சின்னங்கள் / தளங்கள், இந்து மத இடங்களில் கட்டப்பட்ட பழங்கால மசூதிகள் கட்டப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார். கோல்கொண்டா கோட்டை உட்பட தெலுங்கானாவில் உள்ள வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த 8 இடங்கள் தற்போது இந்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் நிலை யில் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு களின் அடிப்படையில், தொல்லியத்துறை இந்த பதிலைத் தெரிவித்துள்ளது.