சென்னை, ஜூலை 28 - வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுமென்று மதி முக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக் கழகத்திலும், கிராக் கூப்யாகி எலொனியன் பல்கலைக் கழகத்திலும் தமிழுக்காக வெறும் இரண்டு இருக்கைகளே உள்ளன. இவற்றுக்குக் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில், தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. ஆனால் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஐசிசிஆர் இணையதளத்தில் தமிழ் இடம்பெற வில்லை.
பாஜக பொறுப்பேற்று எட்டு ஆண்டுகளாக தமிழ்த் துறை பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பி லும் தமிழ்ப் பேராசிரியர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படவில்லை. தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் ஆர்வ மும் பற்றும் உடையவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, வெளி நாட்டு கல்வி நிறுவனங்க ளில் தமிழ் இருக்கைகள் அமையவும், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்களை நியமனம் செய்யவும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.