சென்னை, நவ. 21 - தமிழ்நாடு காவல்துறையில் புதி தாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை உள்துறைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். கடந்தாண்டு கோவை மாவட்டம் உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா உபின் என்பவர் உயிரி ழந்தார். இது மாநிலம் முழுவதும் விவா தங்களை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் தின்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் 380-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு ரூ. 57.51 கோடி செலவில் புதிதாக “பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு” ஏற்படுத்தப்படும் அன்று அறிவித்தார். மாநில உள்துறையும், ஏற்கெனவே பயங்கரவாத தடுப்புப் பிரிவு செயல் படும் கேரளா, உத்தரப் பிரதேசம், மகா ராஷ்டிரா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங் களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. இதன்பின்னணியில், தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக பயங்கர வாதத் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தி, உள்துறை செயலாளர் அமுதா அரசாணை வெளியிட்டுள்ளார். நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி தலை மையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு செயல்படும். டி.ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி தலைமை வகிப்பார். அவருக்கு உறுதுணையாக 4 எஸ்.பி.க்கள், 5 ஏ.எஸ்.பி.க்கள், 13, டி.எஸ்.பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவ லர்கள் என 383 பேர் கொண்ட காவல் அமைப்பு இயங்கும். மேலும், பயங்கரவாத தடுப்புப் பிரிவானது, தமிழ்நாடு முழுவதும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ளவும், சுதந்திரமாக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தப் பிரிவுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரி வுக்கு என முதல் கட்டமாக சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தனி அலுவலகங்கள் செயல்படும். இந்த அலுவலகங்களே காவல் நிலையமாக கருதி, சட்ட நடவடிக்கைகள் எடுக்க வும், வழக்குப் பதிவு செய்யவும் அரசா ணையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு, ரூ. 60 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.