தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவரிடம் சில கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று பத்திரிகையாளர்களுக்குத் தெரியும்.. அப்படியொரு சந்திப்புதான் இது..
அண்ணாமலை : வாங்க, வாங்க.. பேட்டிக்கு நான் தயார். நீங்க உங்க கேள்விகளைக் கேட்கலாம்! நிருபர் 1 : நீங்க இவ்வளவு உற்சாகமாகப் பேட்டி குடுக்கறீங்க.. உங்க “பாஸ்” ஏன் நிருபர்களைக் கண்டாலே “தேங்க் காட்”-னு பயந்து ஓடறாரு..? அண்ணாமலை: பயமா? அவருக்கா? உலக நாடுகள் எல்லாம் பார்த்து பயப்படுற விஷ்வகுரு அவரு.. அவரைப் போய் இப்படி கிண்டல் பண்ண உங்களுக்கு எவ்வளவு தில் இருக்கணும்.?. நிருபர் 1 : அவங்க நாட்டுக்கு வந்து “மன் கீ பாத்”னு அவர் கண்டபடி பேச ஆரம்பிச்சுட்டார்னா? அதான் பயப்படறாங்க.. !
அண்ணாமலை: இனிமே இந்த ஆளு ஏதாவது கேள்வி கேட்டார்னா 1000 ரூபா ஃபைன் கட்டணும், சொல்லிட்டேன்! (மற்ற நிருபர்கள் அந்த நிருபரை அமைதியாக இருக்குமாறு சைகை காட்டுகின்றனர்) நிருபர் 2 : மகாரஷ்ட்டிராவில் உத்தவ் தாக்கரே போய், உங்க ஆளு ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆயிட்டாரே? அண்ணாமலை: எங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சப்பறமும் எங்களை விட்டுட்டு மற்ற கட்சிகளோட கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு நெனைச்சார் உத்தவ் தாக்கரே. அதை அப்படியே விட்டுருவோமா? மோடியோட வாழ்த்துக்களோட ஷிண்டே முதல்வர் ஆயிட்டார் தேவேந்திர பட்னாவிஸ் அவருக்கு விட்டுக் கொடுத்து நாங்க நெனைச்சத சாதிச்சிட்டோம் பார்த்திங்களா? நிருபர் 3 : ஷிண்டே உங்ககிட்ட மாட்டி என்ன பாடுபடப்போறாரோ- சரி அதை விடுங்க. தமிழ்நாடு, கேரளாவிலேதான் நீங்க அந்த மாதிரி விளையாட்டை ஆடறது கஷ்டம்..
கேரளாவிலே பினராயி விஜயனுக்கு எதிரா காய்களை நகர்த்திக்கிட்டு இருக்கோம். தமிழ்நாட்டிலே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்லே 25 சீட் வாங்க திட்டம் போட்டிருக்கோம்.. நிருபர் 4 : நீங்க திட்டம் போடலாம். மக்கள் என்ன செய்யப் போறாங்கன்னு பார்க்கத்தானே போறோம்? நோட்டா ஓட்டைவிட நீங்க கூடுதலா வாங்கிட்டாலே சாதனைன்னு மக்கள் பேசிக்கறாங்க..
அண்ணாமலை: இவர் யாருங்க? இந்த மாதிரி ஆளையெல்லாம் ஏன் கூட்டிட்டு வரீங்க..? இவர் இனிமே கேள்வி கேட்டார்னா 1000 ரூபா ஃபைன் கட்டணும், சொல்லிட்டேன்! (மற்ற நிருபர்கள் அந்த நிருபரையும் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டுகின்றனர்) நிருபர் 5 : நீதிமன்றத்தில உங்ககிட்ட ஏதாவது அறிக்கை கேட்டாங்கன்னா, அதை ஒரு கவர்ல போட்டு ஏன் ஒட்டிக் கொடுக்கறீங்க? அண்ணாமலை: நாங்க என்ன அறிக்கை குடுக்கறோம்கறது எதிர் மனுதாரர்களுக்குத் தெரியக் கூடாதுன்னுதான் அப்படிச் செய்யறோம். அதைக் கூட நீதிமன்றங்கள் இப்ப கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. நீதிபதிகளை நியமிக்கும்போது நாங்க இன்னும் கவனமா இருக்கணும்னு தெரியுது. எங்களை எதிர்த்துக் கேள்வி கேட்கணும்னு நெனச்சாங்கன்னா, அவங்க நீதிபதிகளாக இருக்கவே லாயக்கில்லாதவங்கன்னு அர்த்தம்!
நிருபர் 6 : 1990-கள்ல பயங்கரவாதிங்க பண்டிட்டுகளை மட்டும் கொல்லலை. பண்டிட்டுகள் அல்லாதவங்களும்தான் பலியானாங்க. ஆனா நீங்க பண்டிட்டுகள் மட்டும் பலியானது மாதிரி காஷ்மீர் ஃபைல்ஸ்-னு படம் எடுத்துக் கொண்டாடினீங்க. அண்ணாமலை: வரலாற்றை உள்ளது உள்ளபடி சொல்றதுக்கா நாங்க இருக்கோம்? இந்து ராஷ்டிரம் அமையணும்னா வரலாற்றை எப்படி மாத்தி சொல்லணும்னு எங்களுக்குத் தெரியும். அதான் புதிய இந்தியாவுக்காக பழைய வரலாற்றை மாத்தி எழுதிக்கிட்டிருக்கமே?
நிருபர் 6 : அது சரி.. நீங்க காஷ்மீர்ல மறுகுடியேற்றம் செய்த பண்டிட்டுகள் எல்லாம் பயந்துபோய் ஓடி வராங்களே? அவங்களுக்கு உங்களாலே ஏன் பாதுகாப்பு கொடுக்க முடியலை? அண்ணாமலை: நீங்க இப்படி அனாவசியமா கேள்வி கேட்டீங்கன்னா எப்படி? இவர் இனிமே கேள்வி கேட்டார்னா 1000 ரூபா ஃபைன் கட்டணும், சொல்லிட்டேன்!
(மற்ற நிருபர்கள் அந்த நிருபரையும் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டுகின்றனர்) நிருபர் 3 : டீஸ்டா செதல்வாத். ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர்.. பத்திரிகை சுதந்திரம்.. நீதிமன்றத் தீர்ப்புகள்.. சிபிஐ பற்றியெல்லாம் எங்களுக்கு கேள்விகள் இருக்கு.. கேக்கலாமா? அண்ணாமலை: அப்படின்னா பேட்டி முடிஞ்சுது.. நீங்கள்லாம் போகலாம்!
- சிறிதளவு கற்பனை : ராஜகுரு