புதுதில்லி, ஜூன் 23- ஆயுள் காப்பீடு அல்லாத பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் 2022 மே மாதத் தில் 24 சதவிகிதம் அதிகரித்துள்ள தாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDAI) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐஆா்டிஏஐ மேலும் கூறியிருப்பதாவது: பொதுக் காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் நடப்பாண் டின் மே மாதத்தில் ரூ.15 ஆயிரத்து 404 கோடியாக உள்ளது. இது, 2021 மே மாதத்தில் வசூலான ரூ.12 ஆயி ரத்து 423 கோடியே 98 லட்சத்துடன் ஒப்பிடுகையில் 24 சதவிகிதம் அதிக மாகும். அதேபோல மொத்தமுள்ள 31 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பிரீமியம் வசூலும் 24 சதவிகிதம் உயா்ந்து ரூ. 13 ஆயி ரத்து 566 கோடியே 18 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2021 மே மாதத்தில் ரூ. 10 ஆயிரத்து 954 கோடி யே 18 லட்சம் என்ற அளவிலேயே இருந்தது. இவற்றில் இரண்டு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம், 2021 மே மாதத்தில் ரூ.87 கோடியே 9 லட்சமாக இருந்தது, தற்போது 2022 மே மாதத்தில் 48.6 சத விகிதம் அதிகரித்து ரூ.129 கோடியே 42 லட்சமாக கோடியாக உயர்ந் துள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாத காலத்தில் பொதுக் காப்பீட்டு நிறுவ னங்கள் திரட்டிய மொத்த நேரடி பிரீ மியம் ரூ.29 ஆயிரத்து 867 கோடியே 41 லட்சத்திலிருந்து ரூ.36 ஆயிரத்து 680 கோடியே 69 லட்சமாக வளா்ச்சி கண்டுள்ளது. தனியார் துறையைச் சோ்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீ மியமும் 2021 மே மாதத்தில் ரூ.ஆயி ரத்து 382 கோடியே 71 லட்சமாக இருந்தது, 2022 மே மாதத்தில் 23.6 சத விகிதம் உயா்ந்து ரூ.ஆயிரத்து 708 கோடியே 86 லட்சமாக உயர்ந்துள் ளது.