உதகை, மே 21- நீலகிரி மாவட்ம், கூடலூரில் உள்ள செக்சன் 17 நிலப்பிரச்சனை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோ சித்து, ஒரு குழு அமைத்து உடனடியாக இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதகை அரசு கலைக் கல்லூரி மைதா னத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 9500 பய னாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், 34 கோடி மதிப்பில் 20 புதிய திட்டங்க ளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசு கையில், உயரமான பசுமையான எழில் கொஞ்சும் பல்வேறு சிறப்புகள் உள்ள உத கைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 124 மலர் கண்காட்சியை வெள்ளியன்று துவக்கி வைத்தேன், முப்படை ராணுவ பயிற்சி கல்லூரியை பார்வையிட்டேன், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தியுள்ளர். குறிப்பாக, முதல் முதலாக அரசுப் பேருந்துகளை நாட்டுடமை யாக்கியபோது, அதற்கான திட்டத்தை உத கையில்தான் துவக்கி வைத்தார். அதேபோல் இங்குள்ள ஏரிகளை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கினார். முதுமலை புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தியது, இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது தாயகம் திரும்பியவர்களை காப்பாற்ற 1970 ஆம் ஆண்டு பந்தலூர், கூடலூர், கோத்த கிரி ஆகிய இடங்களில் அவர்களை குடி யமர்த்தினார். அவர்கள் வாழ்வாதாரத்திற் காக டேன் டீ என்ற கழகத்தை உருவாக்கி வேலை வாய்ப்புளை வழங்கினார். இவ்வாறு பல்வேறு நலத்திட்டங்களை நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தினார்.
இதேபோல், இந்த அரசும் இயற்கை யும், மனிதனும் இணைந்து வாழும் வகை யில் பல திட்டங்களை செய்யும். இப்போது உள்ள 20 சதவிகித வனப்பரப்பை 33 சத விகிதமாக உயர்த்த வழிவகை செய்யப் படும். முதுமலை பகுதியில் அதிநவீன விலங்கு கள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும். மேலும், விவசாயத்தை ஊக்குவிக்க, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம் படுத்த, விளைபொருட்களை சேமித்து வைக்க பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப் படும். அதேபோல், சுற்றுலாத்துறையை மேம் படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுலா வழி காட்டிகளுக்கு அரசின் எல்லா உதவிகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், கூடலூரில் உள்ள செக்சன் 17 நிலப்பிரச் சனை குறித்து சென்னை சென்றதும் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரிடம் பேசி ஒரு குழு அமைத்து உடனடியாக இப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். இதேபோல், கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட இடங்கள் அடங்கிய நீலகிரி பிளான் ஏரியா 1 என்று அறிவித்து நீலகிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியை பாதுகாத்தால் தமிழகத்தை பாதுகாப்பது போல் இருக்கும். இது திராவிட மாடல் அரசு, இது அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும். இவ்வாறு முதல்வர் பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ. ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேசஷ், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.