சென்னை, அக்.22- திமுக கூட்டணியை விட்டு வெளி யேறுவதாக வதந்தியை பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது:- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். விரைவாக குண மடைய வாழ்த்து தெரிவித்தார். அதை வைத்து நான் திமுக கூட்ட ணியை விட்டு வெளியேறப் போவதாகவும் அதிமுக கூட்டணியில் இணைய போவ தாகவும் வதந்தி பரப்புகிறார்கள். இது வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. இது திமுக கூட்டணியை பலவீனப் படுத்துவதற்காக அல்ல. சனாதன சக்திகளை எதிர்க்கும் ஜனநாயக சக்தி களை சிதறடிப்பதற்காக கையாளப்படும் யுக்தி. இந்தியாவை இந்து நாடாக மாற்ற முடியாமல் தடுப்பது அரசியல் சட்டம் தான். வருகிற தேர்தலில் மோடி அரசை மக்கள் தூக்கி வீசுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.