புனே, ஜூலை 13- கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைக்கும் என்று சீரம் நிறுவன சிஇஓ ஆதார் பூன வாலா தெரிவித்துள்ளார். இந்திய பெண்கள் மத்தி யில், இரண்டாவது மிக அதிக இறப்புகளுக்கு காரணமாக அமைவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்றும், உலகளவில் நகரங்களில் இருக்கும் பெண்களை விட கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள்தான் இந்த புற்றுநோய்க்கு ஆளா வதாக ஒன்றிய சுகா தாரத்துறை கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1,22,844 பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 67,477 பேர் இந்த நோயால் இறக்கின்றனர். தற்போது, மருந்து சந்தையில் அமெரிக்க நிறுவனத்தின் உரிமம் பெற்ற மூன்று ஹெச்பிவி தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இந்நிலையில் இந்தி யாவிலேயே உருவாக்கப் பட்ட புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி கிடைக்கவுள்ளது. இதுதொடர்பாக சீரம் இன்ஸ் டிடியூட் ஆப் இந்தியா நிறு வனத்தின் சிஇஓ ஆதார் பூன வாலா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எங்களது நிறு வனம் முதல் முறையாக, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கு சிகிச்சை ளிக்கும் ஹெச்பிவி தடுப்பூசியை தயாரித்து வெளியிடுகிறது. மலிவு விலையில் இந்த தடுப்பூசி கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.