புதுச்சேரி மாநிலத்தின் முழுக் கட்டுப் பாடும் ஒன்றிய உள்துறை அமைச்ச கம் வசம் இருப்பதால் அமைச்சர் அமித்ஷா வின் புதுவை விஜயத்தால் புதுச்சேரி மாநில மே அல்லோலகல்லோலப் பட்டதில் ஆச்சரியமில்லை. 15 நாட்களாக காவல்துறையின் பாரா. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். தங்குமிட ஏற்பாடுகள், பயண வழி பாதுகாப்பு பார்வை யிடல்கள் நடந்து கொண்டேயிருந்தன. புதுச்சேரி அரசியலில் என்ன நடக்குமோ? என். ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ஆர். முதல்வராக நீடிப்பாரா? அவர் இல்லை என்றால், யார் முதல்வர்? ஆருடங்கள் பேசப் பட்டுக் கொண்டே இருந்தன. நள்ளிரவு விடுதி களில் காபரே நடனம் நடத்தி கைதானவர் முதல்வராக வாய்ப்பு உண்டா! எந்தக் கட்சி யில் இருந்தாலும் தனது கல்வி வளாகத்தை ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் கூடமாக மாற்றித் தந்தவர் முதல்வர் ஆவாரா! எத்தனை சட்ட மன்ற உறுப்பினர்கள் என்.ஆருடன் இருப் பார்கள். அவர் தனித்து விடப்படுவாரா அல்லது முதல்வர் பதவி மட்டுமே வாழ்நாள் லட்சி யம் என்று அவரே அமித்ஷாவின் பாதம் பணிந்திடுவாரா! இவ்வித சலனங்கள், ஹேஷ்யங்கள், சர்ச்சைகளுக்கு மத்தியில் அமித்ஷா புதுச்சேரி விஜயம் செய்தார்.
புதுச்சேரிக்கு வந்து மாநிலத்தில் அமித்ஷா சாதித்தது என்ன?
இந்தியாவில் வேலையற்ற இளைஞர்க ளின் எண்ணிக்கையில் புதுச்சேரி இரண்டா மிடம். கஞ்சா போன்ற போதைப் பொருள் இளை ஞர்களுக்கு கிடைப்பதில் புதுச்சேரி முதலிடம். புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான ஆலைத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை பறித்த மூன்று பஞ்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. தேர்தல் காலங்களில் 3 பஞ்சா லைகளையும் நவீனப்படுத்தி திறப்போம் என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு காலிப் பணியிடங்கள் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன. முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தை புதுச்சேரியில் நடைமுறைப் படுத்த நடவடிக்கை இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எந்த மாற்றமும் இல்லை. ஞாயிறு மதியம் 12 மணிக்கு உச்சி வெயி லில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் அமித்ஷா. அவர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, காந்தி வீதி, மிசன் வீதி, கடற்கரை சாலைகள் ஆளில்லா திடல்களாக காட்சிய ளித்தன. தப்பித்தவறி வந்தவர்களை மணிக் கணக்கில் வெயிலில் வாட்டி எடுத்தனர் காவல் துறை நண்பர்கள்! அவதிக்குள்ளான அனை வரும் அமித்ஷாவை திட்டித் தீர்த்தனர்.
ஏற்கனவே ஊசலாடிக்கொண்டிருக்கும் திட்டங்களை தொடங்கி வைப்பதாக அறி வித்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் அடிக்கல் நாட்டினார். புதிய பேருந்து நிலை யத்திற்கு அருகில் கட்டப்படவுள்ள மேம் பாலம், போட்டுக்கொண்டிருக்கும் சாலைகள் அதன் பணிகளை மீண்டும் தொடங்கி வைத்தார் ஷா. ஏகப்பட்ட குளறுபடிகளுக்குப் பின்னர் காவலர்கள் பயிற்சியில் தேர்வாகி யிருந்த 300 பேர்களுக்கு பணி ஆணையை அளித்தார். வேறு மாநிலங்களில் இந்த கூத்தை அரங்கேற்ற முடியுமா? அரவிந்தர் - 150 விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் என்.ஆர், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அமித்ஷாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வழக்கமான தமிழ்த் தாய் வாழ்த்து இல்லை. உடன் சென்றவர்களுக்கும், தமிழி சைக்கும், முதல்வருக்கும் அது பற்றி கவலை இல்லை.
வந்தே மாதரம் பாடினார்கள். அனைவரும் எழுந்து நின்றார்கள். முதல்வர் உள்பட விழாவில் யாரும் ஒரு வார்த்தை பேச அனு மதி இல்லை. அமித்ஷா வே முழுவதுமாக உரை நிகழ்த்தினார். இந்தியிலேயே பேசி னார். அரங்கம் முழுவதும் குறட்டைச் சத்தங்களே மிஞ்சின. அமித்ஷாவின் விஜயத்தால் புதுச்சேரி அடைந்த பலன் சென்ற பக்கமெல்லாம் சாலைகள் சீரமைக்கப்பட்டன. ஆனால் அவரை வரவேற்க வைத்த பேனர்களுக்காக சாலைகள் அனைத்தும் பள்ளம் தோண்டப் பட்டன. இதுவரை புதுச்சேரி கண்டிராத அளவிற்கு பேனர்களுக்காக கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட்டது. ஏற்கனவே புதுச்சேரிக்கு வருகைதரும் ஜனாதிபதிகள், பிரதமர்கள் ஒரு சில தமிழ் வார்த்தைகளை அவர்களுடைய மொழியில் எழுதி வைத்துக்கொண்டு பேசுவார்கள். (உதாரணம் வணக்கம் - வண்க்கம் பாரதி, பாரதிதாசன் பாடல்கள் உள்பட அவர்களது வாயில் போட்டு கடித்து துப்புவார்கள்.) ஆனால் அமித்ஷா அதையெல்லாம் செய்யவில்லை. இந்தியை தவிர வேறு எதுவுமில்லை என்ற உறுதியோடு இந்தியிலேயே பேசினார்.
ஆனால் புதுச்சேரியில் புதிய பாஜக அடிவருடிகள், அமித்ஷாவிற்கு வரவேற்பு பேனர்களை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வைத்து தங்களுடைய நன்றியை உரித் தாக்கிக் கொண்டார்கள். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அமித்ஷா வண்டியை நிறுத்தி இவர்களது பேனர்களை பார்க்காது போனது அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. ஒட்டுமொத்தமாக அமித்ஷாவின் 4 மணி நேர புதுச்சேரி வருகையை ஒட்டி புதுச்சேரி மக்கள் பட்ட இன்னல்கள் ஏராளம். அவர்கள் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை வெளி மாநி லங்களில் இருந்து சுற்றுலா வருபவர்களும் அவதிக்குள்ளானார்கள். அமித்ஷா புதுச்சேரி மக்களுக்கு அவதிஷாவானார். அமித்ஷா புதுச்சேரிக்கு வந்ததன் நோக்கம் போகப் போகத்தான் தெரியும். அமித்ஷாவின் வருகையினால் எவ்வித பலனும் இருக்காது என்பதை முன்கூட்டியே அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திக ளும் புதுச்சேரி மக்களை எச்சரிக்கை செய்யும் விதத்தில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் இரண்டு நாள் பிரச்சார இயக்கமும், அமித்ஷா புதுச்சேரி வரும் நாளில், “புதுச்சேரியை வஞ்சிக்கும், இந்தி திணிப்பை திட்டமிட்டு நடத்தும் அமித்ஷா வே திரும்பிப் போ” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இயக்கம் மக்கள் இயக்கமாக நடந்தது.
கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட பேனர் விளம்பரத்திற்கான தொகையை பய னுள்ள முறையில் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம். புதுச்சேரி மாநிலத்தில் பேனர் வைக்க இருந்த தடைச் சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டது. அமித்ஷா புதுச்சேரி வந்து போயிருக்கி றார், திரைமறைவில் திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கலாம். அமைதியான புதுச்சேரியில் கல வரங்கள் நடக்கலாம். அரசியல் வியாபாரி கள் கட்சிகள் மாறலாம். ஆட்சியில் காட்சி கள் மாறலாம். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், இடதுசாரி இயக்கங்களும் ஒன்றுபட்டு இயங்க வேண்டிய காலத்தின் கட்டளையை புதுச்சேரியில் செயல்படுத்து வோம். அதுவே புதுச்சேரியை பாதுகாக்கும். தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவ புதுச்சேரியை நுழைவாயிலாக பயன்படுத்த அனுமதியோம்.