புதுதில்லி, ஜன.21- பிரதமர் நரேந்திர மோடி குறித்த, பிபிசி ஆவணப்பட வீடியோக்களையும் அது தொடர்பான டுவிட்டர் பதிவுகளையும் முடக்குமாறு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லா மியர்களுக்கு எதிரான மத வன்முறையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதைக் கூறும், ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ (India: The Modi Question) என்ற தலைப்பிலான ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 17 அன்று வெளியிடப்பட்டு இருந்த நிலையில், இது நாடு முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மத வன்முறையில், அன்றைய முதல்வர் நரேந்திர மோடி உள்பட மொத்தம் 64 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலை யில், அதற்கு போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து விட்டது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற மும், கடந்த 2022 டிசம்பர் 9-ஆம் தேதி அன்று உறுதி செய்திருந்தது.
இந்தப் பின்னணியில், மோடிக்கு மத வன்முறையில் தொடர்பு உள்ளது என்றும், குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கும் தெரியும் என்று கூறி, அதற்கான ஆவணங்க ளையும் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது, பாஜகவினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, “பிபிசி ஆவணப்படம் அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரச்சாரப் படம். அதில் பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது. இது கண்ணியமானதாக இல்லை. இந்தப் பிரச்சனையை (குஜராத் மத வன்முறையை) மீண்டும் கிளற விரும்பு பவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது” என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவ ணப்படத்தை முடக்குமாறு யூடியூப் நிறு வனத்துக்கும், அந்த விடியோவை இணைத்து வெளியிடப்பட்டிருக்கும் 50-க்கும் மேற்பட்ட டுவிட்டர் பதிவுகளை நீக்கு மாறு டிவிட்டர் நிறுவனத்துக்கும் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில், யூடியூப் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப சட்டம் 2021-இன் கீழ் இதுதொடர்பாக அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது நிலை யில், யூடியூப் மற்றும் டுவிட்டர் நிறுவனங் களும் இந்த அறிவுறுத்தலுக்கு இணங்கி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்கி விட்ட நிலையில், பிபிசி ஆவணப் படம் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகா ரம் மற்றும் நம்பகத்தன்மையின் மீது அவ தூறு ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கிறது என்று மோடி அரசு, மிக சாமர்த்தியமாக பிபிசி-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தை திருப்பி விட்டுள்ளது.