அகில இந்திய மின்வாரிய உழைக்கும் பெண்கள் அமைப்பு மாநாடு சனிக்கிழமையன்று (அக்.14) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் செயல் தலைவர் எஸ்.தேவராய் பேசினார். அருகில் கூட்டமைப்பின் தலைவர் இளமறம் கரீம், செயலாளர் இ.விஜயலட்சுமி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர்.சிந்து, மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தனலட்சுமி, மின்வாரிய உழைக்கும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தீபா,கே.ராஜன் உள்ளிட்டோர் உள்ளனர்.