சென்னை, ஜூலை 19- கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர், சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி விடுதியில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள மாணவியின் வழக்கின் விசாரணையை துரி தப்படுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் கூட்டாக விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரிய நெசளூர் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி, கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த ஜூலை 13 அன்று மாணவி மர்மமான முறையில் இறந் துள்ளார் எனும் செய்தி நம் அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை கோரி பல் வேறு அமைப்புகள் கடந்த நான்கு நாட்களாக கள்ளக்குறிச்சியில் போராடி வருகின்றனர். மர்ம மரணத்திற்கு காரணமான அனை த்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மானது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்களுடன் இணைந்து மாநில, மாவட்ட தலைவர்கள் அலமேலு, தேவி, மேரி, மாதவி ஆகியோர் தலைமையில் ஜூலை 16 அன்று கள்ளக்குறிச்சியில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.
உரிய முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவரும் கைது செய் யப்படுவார்கள் என்கிற காவல்துறை அதிகா ரிகளின் உத்தரவாதத்தின் அடிப்படையில் அன்று மறியல் போராட்டம் கைவிடப் பட்டது. இந்த தனியார் பள்ளி விடுதியில் ஏற் கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடை பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பள்ளியில் பயின்ற ஒரு மாணவி மேல்நிலை நீர்த் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார். இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் வரை சென்று 8 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதே போல் ஜூலை டிசம்பர் 8 2005-ல், இந்த பள்ளியில் பயின்று வந்த எல்கேஜி மாணவி பிரதிக்ஷா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த மாணவி மரணத்திற்கு நியாயம் கேட்டும் பள்ளி நிர்வாகத்தால் பல மாணவ, மாணவிகள் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருப்பதாகவும், பள்ளி வாகன விபத்தினால் பல மாணவிகள் நினைவிழக்க செய்ததையும் கண்டித்து டிசம்பர் 28. 2005 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் ஒரு மரணம் மர்ம மான முறையில் நடந்திருப்பதாலும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ள தாலும், இது குறித்து காவல்துறை தீர விசா ரித்திட வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர்களும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் மத்தி யில் இந்த மரணம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரும்பத்தகாத சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளும் தற்போது நடை பெற்றுள்ளன. போராட்டங்கள் தீவிரம டைந்து வரும் சூழலில் பள்ளி தாளாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிபிசிஐடி புலனாய்வு துறை விசார ணையை துவங்கி உள்ளது. விசாரணை முடிவு வெளியிடாத நிலையில், பள்ளி நிர்வா கம் மீது தவறில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருப்பது பொருத்த மானதாக இருக்காது. பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு காவல்துறை உண் மையை மறைக்க முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, கல்வி நிலையங்கள் பெண் கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பவையாக இருந்திட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், இப்பள்ளியில் நடைபெற்ற கடந்த கால மர்ம மரணங்கள் குறித்து முழுமையான விசாரணையை சிபிசிஐடி நடத்திட வேண் டும். குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை குறுகிய காலத்திற்குள் வழங்கிட வேண்டும். மாணவியை இழந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தை வழங்கிட வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவரு க்கு அரசு வேலையை தமிழக அரசு உறு திப்படுத்திட வேண்டும். இப்பள்ளியில் கடந்த காலத்தில் நடந்த மர்ம மரணங்கள் குறித்து முழுமையான விசாரணை, ஆய்வை நடத்தி அவை உண்மையாக இருக் கும் பட்சத்தில் பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை மீது உரிய நடவடிக் கையை தமிழக அரசு எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.