states

125 ஆவது திருத்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

நாமக்கல், செப். 22- அரசியலமைப்பு 125ஆவது திருத்த  மசோதாவை உடனடியாக நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என  நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று  வரும் ஆதிவாசிகள் உரிமைகளுக்கான  அகில இந்திய மாநாடு வலியுறுத்தி யுள்ளது.  இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மாநிலங்களவையில் அரசியலமைப்பு 125ஆவது திருத்த  மசோதா 2019 தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஆறாவது அட்டவணை பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி மற்றும் பிற அதிகாரங்களை வழங்குகிறது.  இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு பொது விசாரணைகளை நடத்தி ஆறாவது அட்டவணையின் கீழ்  உள்ள நான்கு வடகிழக்கு மாநிலங்க ளில் கருத்துக்களைக் கேட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆனால், மசோதாவை நாடாளுமன்றத் தில் நிறைவேற்ற அரசு இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. மறுபுறம் அரசாங்கம் அதிகாரங்களை வழங்கு வதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள  அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சி யைச் செய்து வருகிறது. எனவே 125  ஆவது திருத்த மசோதாவை உடனடி யாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென ஆதிவாசிகள் உரிமை களுக்கான அகில இந்திய நான்காவது மாநாடு வலியுறுத்துகிறது. 

மணிப்பூர்

அகில இந்திய மாநாடு மணிப்பூரில் உள்ள  நிலை குறித்து ஆழ்ந்த கவலையை  வெளிப்படுத்துகிறது. நான்கு மாதங் களுக்குப் பிறகும், ஆயிரக்கணக்கா னோர் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர். இன்னும் பல இறந்த உடல்கள் புதைக்கப்படாமல்  உள்ளன. மணிப்பூர் மாநிலம் ஆழமாக பிளவுபட்டு உள்ள நிலையில், இயல்பு நிலைக்கு திரும்புவது தற்போது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளன. பாஜக தலைமையிலான இரட்டை என்ஜின் அரசின் கொள்கைகளின் நேரடி  விளைவு தான், தற்போது இது போன்று  முன் எப்போதும் இல்லாத நிலை  உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும் குறிப்பாக பிரதமரும் தலையிட மறுக்கிறார்கள்.  ஆதிவாசிகள் தேசிய மாநாடு, அனைத்து சமூகங்களிலும் துன்பப்ப டும் மணிப்பூர் மக்களுக்கு தனது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கிறது. எனினும், மலைப்பகுதிகளில் வாழும்  குக்கி சமூக பழங்குடியினர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மியான் மரில் இருந்து போதைப்பொருட்களை  கொண்டு வரும் பயங்கரவாதிகளை, சட்டவிரோதமாக குடியேறுபவர்களை விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்த சமூகத்தையும் துஷ்பிர யோகம் செய்யும் வெறுப்பு பிரச்சா ரத்தை அம்மாநில முதலமைச்சரும், ஆர்எஸ்எஸ் - பாஜகவினரும் செய்து வருகின்றனர். மேலும், இதற்கு முக்கியக் காரணம் பழங்குடியினர் வாழும் மலைப்பகுதிகள் கனிம வளத் தால் செழிப்பாக இருப்பது முக்கியக் காரணமாகவும் உள்ளது. குக்கி பழங்குடியினர் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன் கொடுமைகளை மாநாடு வன்மையாகக்  கண்டிக்கிறது. இது மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமானது. பாஜக வின் உயர்மட்டத் தலைவர்களின் இந்தச் செயல், பழங்குடியினருக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான அணுகுமுறையை தெளிவாகக் காட்டு கிறது. குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து விரைவான தண்டனை வழங்க வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது. 

ஆதிவாசிகளின் பட்டியல் நீக்கத்திற்கு எதிரான தீர்மானம்

இந்து மதம் அல்லாத பிற மதங் களுக்கு மாறிய ஆதிவாசிகளை குறிப்பாக கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய வர்களை பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதை தடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பு டைய அமைப்புகள் முன்வைத்த கோரிக் கையை ஆதிவாசிகள் உரிமைகளுக் கான அகில இந்திய மாநாடு திட்டவட்ட மாக நிராகரிக்கிறது. உறுதியாக தனது  எதிர்ப்பை பதிவு செய்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜன ஜாதி  சுரக்சா மஞ்ச் என்ற ஒரு தளத்தை உரு வாக்கி உள்ளது. இது இந்த பட்டிய லில் இருந்து நீக்குவதற்கான கோரிக் கையை முன்வைத்து, சத்தீஸ்கர், ஜார்க் கண்ட், மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் கிறிஸ்துவ ஆதி வாசிகளை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி  பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. சத்தீஸ்கரில் கிறிஸ்துவ ஆதிவாசிகள் இவர்களால், தாக்கப்பட்டு தேவாலயங்கள் சேதப் படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்துவ ஆதி வாசிகளின் இறந்த உடல்கள் அவர்கள்  சொந்த நிலத்தில் உள்ள புதை குழி களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு அவை கிறிஸ்தவ கல்லறைகளுக்கு கொண்டு செல்லப்படும் வரை வெளியே அழுக விடப்பட்டுள்ளன.  ஆதிவாசி கிராமங்களில் கிறிஸ்த வர்களின் சமூகப் புறக்கணிப்புகளுக் கான பிரச்சாரம் திட்டமிட்டு தொடங்கப் பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு எதி ரான பிற வன்முறைகளில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக வழக்குகள் ஏரா ளம் உள்ளன. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இரக்கமற்ற முறையில் அடிப்பது, வீடுகளுக்கு தீ வைப்பது, வாழ்வாதார மையங் களை சேதப்படுத்துவது, ஆதிவாசி மக்களிடையே அச்சத்தை பரப்புவது, அவநம்பிக்கையை ஏற்படுத்தி வெறுப்பை உண்டாக்குவது போன்ற  சூழலை அவர்கள் உருவாக்கி வருகிறார் கள். இத்தகைய தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பெற்ற சக்திகள் பொறுப்பேற்றாலும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு ஆதிவாசிகளை பாது காக்க தவறிவிட்டது என்பதே நிதர்சன மான உண்மையாக உள்ளது.

இந்துத்துவ அடையாளத்தை உருவாக்க

இதனுடன் பழங்குடியினர் மத்தி யில் இந்துத்துவ அடையாளத்தை உரு வாக்க சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.  இந்து மதத்தில் பழங்குடி நம்பிக் கையை ஒருங்கிணைப்பதற்காக சில  சமயங்களில் பழங்குடியின தெய்வங் கள் இந்த கோவில்களில் வைக்கப்படு கின்றன. பாரம்பரிய புனித தலங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் இந்து  கோயில்களாக மாற்றும் வகையில் சீர மைக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச் சாரத்தின் ஒரு மோசமான நோக்கம், கிறிஸ்துவ ஆதிவாசிகளுக்கு சொந்த மான நிலத்தை வெளியில் கொண்டு வந்து நிலத்தை அபகரிப்பதை எளிதாக் குவதாகும்.  கிறிஸ்துவ ஆதிவாசிகள் அதிகம்  வசிக்கும் பகுதிகளில் கனிம வளங் களை எளிதாக கொள்ளையடிக்கலாம் என்பதாலும் இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரு கிறார்கள். ஒருபுறம், கிறிஸ்துவ ஆதி வாசிகளின் இட ஒதுக்கீட்டின் பலன்களை பறிக்க இந்த பிரிவினைப் பிரச்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மற் றொன்று இட ஒதுக்கீட்டின் பலன்களை  அவர்களுக்கு நீட்டிக்க பல்வேறு ஆதி வாசிகள் அல்லாத சமூகங்களை பட்டி யல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இவை யாவும் குறுகிய தேர்தல் ஆதாயத்திற்காக செய்யப் பட்டு வருகிறது. எனவே, ஆதிவாசிகள் உரிமைகளுக் கான தேசிய மாநாடு பட்டியலில் இருந்து  கிறிஸ்துவ பழங்குடியினரை நீக்கு வதற்கு உறுதியான எதிர்ப்பை இந்த  தீர்மானத்தின் மூலமாக தெரிவிக்கிறது. மேலும், இனிவரும் நாட்களில் ஆதி வாசி மக்களை இது போன்ற பிரிவின மான பிரச்சாரத்துக்கு எதிரான சக்தி களுக்கு எதிராக திரட்டும் முயற்சியில் தொடர்ந்து மேற்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, அகில இந்திய மாநாட்டை வாழ்த்தி, இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.சானு உரையாற்றினார்.