சென்னை, நவ. 16- சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபட வந்த நந்தனாரை உள்ளே அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகரா கலாம் என்ற சட்டம் வந்திருக்காது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வரலாற்று ஆராய்ச்சித் துறை மற்றும் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி அறக்கட்டளை சார்பில், “பின் நகரும் காலம் – தமிழக தொல்லியல் ஆய்வுகளை முன் வைத்து” என்ற தலைப்பில் சொற்பொழிவு கூட்டம், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாயன்று (நவ. 15) நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அமைச்சர் பொன்முடி பேசுகையில், வரலாறு என்பது வரலாறாகவே இருக்க வேண்டும். உண்மை யான வரலாற்றை கொண்டு வரவேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என கூறினார். அகழ்வாராய்ச்சி பணிக்காக 5 கோடியை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆவண காப்பகம் வளர்ச்சிக்காக 2022இல் கையேடு ஒன்றை முதலமைச்சர் வெளி யிட்டுள்ளார்.
ஆரிய நாகரிகத்திற்கு முன்பா கவே இந்தியாவின் தெற்கு பகுதியில் திராவிட நாகரிகம் இருந்தது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அலெக்சாண்டர் படையெடுத்து வரும்போது தான் ஆரிய திராவிடம் இங்கே வந்தது. அதற்கு முன்பே இங்கே திராவிட நாகரீகம் இருந்தது என்றார். ஒரு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயி லுக்கு உள்ளே பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். போனாலும் வெளியில் நிறுத்தி விடுவார்கள். கோயில் மூலஸ்தானத்தில் சுவாமி இருக்கும் போது நந்தி நடுவில் இருக்கும். எல்லா கோயில்களிலும் சுவாமிக்கு எதிரே நந்தி சிலை இருக்கும். ஆனால் சிதம்ப ரம் கோயிலில் மட்டும் தான் நந்தி சற்று விலகி இருக்கும். நந்தனார் வழிபட நடராஜர், நந்தியை விலகி இருக்க சொன்னதாக கூறுவார்கள். நந்தியை விலகியிருக்க சொன்ன நடராஜர், நந்தனாரை உள்ளே அழைத்திருந்தால் இன்றைக்கு அனைத்து சாதியினர் அர்ச்சகரா கலாம் என்ற சட்டம் தேவையில்லாமல் போயிருக்கும் என அமைச்சர் பொன்முடி தெரி வித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆவண காப்பகம் தமிழ்நாட்டில் அமைந்து இருப்பது தமிழகத்திற்கு சிறப்பு. ஆவண காப்பத்தில் இருந்துதான் முதலில் அகழ்வாராய்ச்சி தொடங்க வேண்டும். இதை அனைத்தையும் டிஜிட்டல் ஆக்க இந்த துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து அகழ்வாராய்ச்சியும் அறிவியல் ரீதியாக ஏற்று கொள்ளும்படி செய்து வருகி றோம் என தெரிவித்தார்.