‘அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’
தருமபுரி, நவ.19- அதிமுகவுக்கும், பாஜ கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தருமபுரியில் நடை பெற்ற விழாவில் பங்கேற்ற அவர், அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டத்தை தெளிவாக அறிவித்துவிட்டோம்.மீண்டும் தெரிவிக்கிறேன், அதிமுகவுக்கும், பாஜ கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
22 மீனவர்கள் விடுதலை
இராமேஸ்வரம்,நவ.19- இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதி யைச் சேர்ந்த 22 மீன வர்கள் காங்கேசன் கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், இலங்கை அரசு, படகுகளு டன் 22 மீனவர்களையும் ஞாயிறன்று விடுவித்தது. இதையடுத்து மீனவர்கள் அனைவரும் பாம்பன் குந்துகால் துறைமுகத்திற்கு ஞாயிறன்று வந்தனர்.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர், நவ.19- மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிறு காலை 61.63 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4165 கன அடியிலிருந்து வினாடிக்கு 3193 கன அடியாகக் குறைந் துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 26.07 டிஎம்சியாக உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, நவ.19- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்ட அறிக்கையில், கன்னி யாகுமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி களில் ஒரு வளி மண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவ.20 -ஆம் தேதி, கடலோர தமிழகத்தில் பெரும் பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்க ளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் ஒப்பந்தம்
பெர்லின், நவ.19- ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடு களுக்கிடையே எதிர்காலத் தில் செயற்கை நுண்ணறிவு துறையில் எவ்வாறு கட்டுப் பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் ஏற் படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய செயற்கை நுண்ணறிவு சேவை வழங்குபவர்களை இணைக்க தயாராக உள்ள தாகவும் தெரிவித்துள்ளன.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது இன்று விசாரணை
புதுதில்லி, நவ.19- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்துள் ளார். இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று (நவ.20) உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரிக்க உள் ளது. இதேபோல் கேரள அரசு, அம்மாநில ஆளுநர் மீது தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணையும் இன்று நடைபெறுகிறது.
6 போலீசார் விபத்தில் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம் பர் 25 அன்று சட்டமன்ற தேர் தல் நடைபெறவுள்ள நிலை யில், ஞாயிறன்று மாலை ஜுன்ஜுனு பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பாது காப்பு பணிக்காக 7 பேர் கொண்ட ராஜஸ் தான் மாநில போலீசார் கார் ஒன்றில் ஜுன்ஜுனு நோக்கிச் சென்று கொண்டி ருந்தனர். ஷுரு மாவட்டத்தின் சுஜான்கர் சாதர் பகுதி அருகே வந்தபோது நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்திற் குள்ளானது. இந்த கோர விபத்தில் படு காயம் அடைந்த 7 போலீசாரையும் அரு கில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே 6 போலீசார் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து உயிருக்கு போராடிவரும் சுக்காராம் என்ற காவ லருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குஜராத் கடத்தல் மதுபானங்களை மீண்டும் கடத்திய குஜராத் போலீசார்
பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தில் போலீசாரே மது பானங்களை கடத்தும் சம்ப வம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதா பாத் நகருக்கு அருகே பாக்கூர் சரக போலீசார் வாகனச் சோதனையில் மின்விசிறி பெட்டிகளில் 482 கடத் தல் உயர்ரக மதுப்பாட்டில்களை கைப் பற்றினர். இதன்மதிப்பு ரூ.1.5 லட்சம் என்ற நிலையில், மின்விசிறிகள், மதுபாட்டில் களும் பாக்கூர் காவல் நிலைய லாக் கப்பில் வைக்கப்பட்டன. கைப்பற்றப்பட் பொருட்களை பார்வையிட அதிகாரிகள் சென்ற பொழுது, லாக்கப் காலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில், அக்.25 அன்று இரவு 10 மணியளவில் உதவி ஆய்வாளர் அர விந்த் ராஜு பாய் மதுபானம் இருந்த லாக் கப் அறைக்குள் செல்வது பதிவாகியிருந் தது. அதிகாரிகளின் தொடர் விசாரணைக் குப்பின் உதவி ஆய்வாளர் ராஜூபாய் மற்றும் 2 போலீசார் உள்ளிட்ட 6 பேர் 1.57 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட் டில்களையும், ரூ.40,000 மதிப்புள்ள மின் விசிறிகளையும் திருடியது விசாரணை யில் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் மதுபானங்களை மீட்ட போலீசார் மீண்டும் கடத்தி விற்பனை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
திருச்செந்தூர் கோவில் குறித்து அவதூறு பரப்பியவரை தேடும் போலீஸ்
சென்னை,நவ.19- திருச்செந்தூர் முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு தரிசன கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும், சிறப்பு தரிசன கட்டணம் என பொதுமக்களிடம் ஆயிரம் ரூபாய் வசூலித்து, தரிசன சீட்டு கொடுக்காமல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. . இது என்ன கணக்கு என்று புரியவில்லை’ என பேசியபடி வீடியோவை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டவர் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், ‘ரூ.1000 கட்டண தரிசன வரிசையில் பணி செய்யும் சிறப்பு அலுவலர் நுழைவு சீட்டு வழங்குவதை முற்றிலும் மறைத்து, அலுவலர்கள் பணம் வாங்குவதை மட்டும் ஒரு கோணத்தில் வீடியோ எடுத்துள்ளனர். எனவே,சமூக வலைதளத்தில் பொய் தகவலை பரப்பியதாக திருச்செந்தூரை சேர்ந்த பிருதிவி ராஜ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
சென்னை, நவ.19- திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், சிறப்பு தரிசன கட்டணம் மட்டுமே ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மற்றபடி வேறு எந்த கட்டண மும் உயர்த்தப்படவில்லை என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான், விஸ்வரூப தரிசன கட்டணம்ரூ.500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், அபிஷேக கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலை யில், அறங்காவலர் குழு முடிவின்படி அறிவிப்பு வெளி யிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்டு, ரூ.800ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம், இந்தாண்டு முதல் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேநேரத்தில், ரூ.100 சிறப்பு தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் மாற்றம் இல்லை என்றார். தரிசன கட்டணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
தீபவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள்
திருவண்ணாமலை,நவ.19- திருவண்ணாமலை தீபவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். திருவண்ணாமலையில் செய்தியாளடம் பேசிய அவர் இந்த வருடம் தீபத்திருவிழாவிற்கு சுமார் 50 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தீபத்திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களை அழைத்து வரவும் மற்றும் கொண்டு சேர்க்கவும் இந்த வருடம் 2700 பேருந்துகள் (6832 நடைகள்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திரு வண்ணாமலை சுற்றுபுறங்களில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையங்கள் கோவில் பகுதியிலிருந்து சுமார் 5 முதல் 10 கி.மீ தூரம் உள்ளது. மக்கள் சிரம மின்றி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு வந்து செல்வதற்கு, சுமார் 149 இலவச பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 31 மினி பேருந்துகள் ரூ10 கட்டணத்திலும், சுமார் 2800 ஆட்டோரிக்ஷாக்கள் ரூ.30 மற்றும் ரூ.50 என்ற கட்டண விகிதத்தில் இயக்க நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. தீபம் ஏற்றிய பின்பு மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் சிரமமின்றி தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல 2700 பேருந்துகளுடன் கூடுதலாக 100 பேருந்துகள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, நவ. 19- சபரிமலைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பேருந்து, ரயில், வேன் மூலம் பக்தர்கள் சபரிமலைக்கு பயணிப்பார்கள். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோட்டையம் வரை, கோட்டயத்திலி ருந்து சென்னை வரை சிறப்பு ரயில் இயக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி (ரயில் எண் 06027) நவம்பர் மாதம் 19 மற்றும் 26 தேதி களிலும் டிசம்பர் மாதத்தில் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் கோட்டயத்தில் இருந்து (ரயில் எண் 06028) நவம்பர் மாதத்தில் 20, 27 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படுகிறது. அதேபோல் ஜனவரி 1ஆம் தேதியும் சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலில் 12 ஏசி பெட்டிகளும், 6 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளும், 2 முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் சென்று சேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் உலக தமிழர் மாநாடு
சென்னை,நவ.19- சென்னை வளர்ச்சி கழகத் தலைவரும் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நிறுவனருமான டாக்டர் வி.ஆர். சம்பத் 10-வது உலக தமிழர் மாநாடு வருகிற ஜனவரி 9, 10-ந்தேதிகளில் சென்னையில் நடைபெறும் என அறிவித்துள்ளார். மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
உடல்நலக்குறைவால் விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை
சென்னை, நவ.19- தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சனிக்கிழமையன்று மாலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி மற்றும் இருமலால் அவதிப்பட்ட அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதை யடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் விஜயகாந்துக்கு சளி தொல்லை சீராவதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி விஜய காந்த்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் திங்களன்று வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நலக்குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை பற்றி தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று தேமுதிக கேட்டுக்கொண்டுள்ளது.