states

img

பாஜகவுக்கு கூஜா தூக்கிய மாதவன் காட்டில் மழை

புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நடிகர் மாதவனை மோடி அரசு நியமித்துள்ளது. முன்னாள் தலைவர் - இயக்குநர் சேகர் கபூரின் பதவிக்காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைந்து விட்ட நிலையில், அந்த இடத்திற்கு நடிகர் மாதவனை தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நியமித்துள்ளதாக, எப்டிஐஐ பதிவாளர் சயீத் ரபீஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

எப்டிஐஐ தலைவர் தலைமை யிலான, எப்டிஐஐ சொசைட்டியில் 12 பேர் பரிந்  துரைக்கப்பட்டு உள்ளனர். இவர் களைப் பொறுத்தவரை, எட்டு பேர்  ‘பெர்சன்ஸ் ஆப் எமினன்ஸ்’ பிரி வின் கீழும், நான்கு பேர் எப்டிஐஐ  முன்னாள் மாணவர்கள் பிரிவின் கீழும் நியமிக்கப்படுவது வழக்கம்.  நிறுவனத்தின் தலைவரை நிய மிக்கும் போது, உறுப்பினர்களில் ஒருவரைப் பரிந்துரைப்பதே  அமைச்சகத்தின் வழக்கம். ஆனால், அக்டோபர் 2017-இல்  பாஜக-வைச் சேர்ந்த நடிகர் அனுபம் கெர்-ரை தலைவராக நிய மித்ததன் மூலம் வழக்கமான அந்த  மரபை, ஒன்றிய அரசு மீறியது. தற்  போது நடிகர் மாதவன் விஷயத்தி லும் மரபை மீறியே ஒன்றிய அரசு  அவரை நியமித்திருப்பதாக கூறப் படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு ‘ராக்  கெட்ரி: தி நம்பி விளைவு’ என்ற  திரைப்படத்தை நடிகர் மாதவன்  இயக்கி நடித்தார். படவெளியீட்டை யொட்டி மாதவன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

அப்போது, “அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலகோடி  செலவழித்து செவ்வாய்க் கிரகத்துக்கு செயற் கைக் கோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா 2014- ஆம் ஆண்டு சிறிய எஞ்சினை  வைத்துக்கொண்டு செவ்வாய்க்கிர கத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தவும், செவ்  வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை  அடையவும் நமது முன்னோர்கள்  உருவாக்கிய பஞ்சாங்கத்தின்படி யான நட்சத்திரம் மற்றும் கோள் களின் வரைபடம்தான் (Celestial Map) இந்தியக் குழுவுக்கு உதவி யது” என்று பேசினார். இது அப்போது கடும் எதிர்ப் புக்கு உள்ளானது. ஆர்எஸ்எஸ், சங்-பரிவாரங்களின் மொழியில் மாதவன் பேசுவதாகவும், பழைய பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பப்பட்டதாக மாத வன் கூறியது அப்பட்டமான பொய்  என்றும் ‘சந்திரயான்’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள் ளிட்டோர் விளக்கம் அளித்தனர். எனினும் பழைய பஞ்சாங்கப் பேச்  சுக்களையே மாதவன் பேசி வந்தார்.

75-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசும்போது, “பிரதமர் மோடி அவரது பதவிக்காலத்தை தொடங்கியபோது, மைக்ரோ பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்.  அப்போது, ‘அது வேலை செய் யாது, இது ஒரு பேரழிவு’ என்று  பொருளாதார சமூகத்தின் மத்தி யில் உலகம் முழுவதும் ஒரு கோபம்  இருந்தது. ஆனால் ஓரிரு ஆண்டு களில் ‘முழு கதையும் மாறிவிட் டது’. மைக்ரோ - எகானமியைப் பயன்படுத்தும் மிகப்பெரிய நாடு களில் ஒன்றாக இந்தியா ஆனது. இதுதான் புதிய இந்தியா” என்று  பாஜக அரசைப் புகழ்ந்து தள்ளி னார். இதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 69வது தேசிய விருதுகளில், சிறந்த திரைப்படத்திற்கான விருது, மாதவனின் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’க்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்ததாக தற்போது இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII)  சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வா கக்குழு தலைவர் பதவியும் மாத வனுக்கு தூக்கிக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு நன்றி  தெரிவித்துள்ள மாதவன், “எதிர் பார்ப்புகளை நிறைவேற்றுவேன்” என்று உறுதி அளித்துள்ளார்.