states

இந்தாண்டு மீண்டும் ‘நீட்’ முதுநிலை தேர்வு

புதுதில்லி, மே 13 - ‘நீட்’ மருத்துவ முதுநிலை தேர்வு நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதன்காரணமாக, கடந்தாண்டு தேர்வுக்கே இன்னும் கலந்தாய்வு - மாணவர் சேர்க்கை முடியாத நிலையில், இந்தாண்டுக்கும் தேர்வு  நடப்பது உறுதியாகி இருக்கிறது. இளங்கலை மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ஆம் தேதியும், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21-ஆம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்திருந்தது.  கடந்த ஆண்டுக்கான முது நிலை மாணவா் சேர்க்கை கலந்தா ய்வே இன்னும் நிறைவடையாத நிலையில், நடப்பாண்டுக்கான தேர்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதுநிலை மருத் துவ படிப்புக்கான நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். 2022-ஆம் ஆண்டிற்கான முது நிலை மருத்துவப்படிப்புக்கான நீட்  தேர்வை தள்ளி வைக்கக்கோரி உச்ச  நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. “கடந்த 2021-ஆம்  ஆண்டுக்கான முதுநிலை நீட்  கலந்தாய்வு தற்போது நடைபெறு வதால் புதிதாக தேர்வு நடத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த ஆண்டுக்கான தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, “இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும், நாங்கள் தலையிட விரும்பவில்லை” என கூறிய நீதிபதிகள், “2022-ஆம் ஆண்டிற்கான நீட் முதுநிலை தேர்வை மே 21-ஆம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது” என்று மறுத்துவிட்டனர். இதனால் திட்டமிட்டபடி முதுநிலை நீட் தேர்வு நடப்பது உறுதியாகி இருக்கிறது.