states

“ஆதி இசை தமிழ் இசையாகத்தான் இருக்க வேண்டும்”: அமைச்சர்

சென்னை,ஏப்.11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று (ஏப்.1) புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புதிதாக இசைப்பள்ளி தொடங்கப்படுமா? என அதிமுக உறுப்பி னர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “விராலி மலை என்பது இசை வளர்த்த மண். பெரும் இசைவாணர்கள் வாழந்த, வாழுகின்ற பூமி அது. குறிப்பாக பரதநாட்டியக் கலை யில், 32 வகையான அடவுகளுக்கும் தனித் தனியே நாட்டிய அபிநயங்களோடு ஆடக் கூடிய மிக சிறப்பான பரதநாட்டியக் கலை ஞர்கள் அங்கு வாழ்ந்தார்கள். இசை பரம்ப ரையினர் வாழ்ந்த பெருமைக்குரிய மண். குறவஞ்சி நாடகத்தை 1973 ஆம்  ஆண்டு வரை கூட அங்கே, நடத்திய மண்.  அருணகிரிநாதரால் பாடபெற்ற மண். அந்த மண்ணிற்கென்று ஒரு தனியான இசை பாரம்பரியம் இருப்பதை சட்டப்பேரவை உறுப்பினர் சுட்டிக்காட்டியதை நான் வரவேற்கிறேன். ஆனாலும் கூட அங்கிருந்து 28 கி.மீ தொலைவில் திருச்சி இருக்கிறது. 40 கி.மீ தொலைவிலே புதுக் கோட்டையில் இசைப்பள்ளிகள் இருக்கின் றன. எனவே எதிர்காலத்தில் அங்கு ஒரு இசை  மரபினை போற்றி வளர்க்கக்கூடிய ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்படும்போது இந்த  கோரிக்கையை அரசு நிச்சயமாக பரிசீலிக் கும்” என்றார்.

துணைக் கேள்வி எழுப்பிய விஜய பாஸ்கர், “பரதம், நாட்டியம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கலை வளர்த்த தமிழகத்தில், வரும் காலத்திலே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்த கலைஞர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையிலே கலை பண்பாட்டுத் துறையின் மூலம் உலகள வில் நமது கலைகளை எடுத்துச் செல்லக் கூடிய புதிய திட்டங்கள் தொடர்பான கருத் துருகளை அரசு ஏற்படுத்துமா? என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம்  தென்னரசு,“ கலை பண்பாட்டு நிகழ்ச்சிக ளுக்கு அரசு முக்கியத்தும் கொடுத்து வரு கிறது. “நம்ம ஊர் திருவிழா”பல்வேறு கலை  வடிவங்களை, குறிப்பாக நாட்டார் கலை வடிவங்களை காட்சிப்படுத்துகின்ற மிக பெரும் நிகழ்வு சென்னையில் நடத்தப் பட்டது.  நலிவுற்ற கலைஞர்களையும், அவர்க ளது வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கக் கூடிய வகையில், உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதாக இருந்தாலும், இந்த  கலை வடிவங்களை உலகளவில் பரப்பக் கூடியதாக இருந்தாலும் முதல்வர் மிகுந்த  ஆர்வம் காட்டுகிறார். வரும் காலங்களி லும் தமிழ் மண்ணுக்கென்று சொந்தமாக இருக்கக்கூடிய இத்தகைய கலை வடிவங் களை, நுண் கலைகளை , செவ்வியல் இசை  கலை வடிவங்களை உலகளவில் எடுத்துச் செல்லும் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் என்றும் கூறினார்.