சென்னை, டிச.11- மாண்டஸ் புயல் காற்றில் உயிரிழந்துள்ளோர் குடும்பங்க ளுக்கும், பயிர்களை இழந்து நிற்கும் விவசாயிகள், வாழ்விடம் உள்ளிட்ட வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கும் போதுமான நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது: வங்கக் கடலில் உருவான “மாண்டல்” புயல் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட அனுபவத்தில், மாண்டஸ் புயல் தாக்குதலை எதிர் கொள்ள தமிழ்நாடு அரசு முன்னெச் சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை களை விரிவாக மேற்கொண்டது. இதற் கான முன் முயற்சிகளை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை, எந்த நிலையினையும் சந்திக்க அரசு தயார் நிலையில் உள்ளது” என அறிவித்தார். பேரிடர் மீட்புக் குழு, நிவாரண ஏற்பாடுகளும் தயார் நிலை யில் வைக்கப்பட்டன. இந்தச் சூழலில் கடந்த 10ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்ல புரம் அருகில் மாண்டஸ் புயல் கரை கடந்தது. சென்னைப் பெருநகரின் வீதி களில் மழை வெள்ளம் தேங்காமல், போக்குவரத்து தடையின்றி இயங்கியது. மின்சாரம் பெருமளவு தடையின்றி கிடைத்தது. எல்லா வற்றுக்கும் மேலாக புயல் காற்றின் தாக்குதலில் விழுந்த மரங்கள் உடனடி யாக அப்புறப்படுத்தப்பட்டன. மாண்டஸ் புயலில் மக்களின் இயப்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் சமாளித்த அரசின் நடவடிக்கை அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் கடுமையான புயல் காற்றும், தொடர் மழையும் இருந்த நேரத்தில், சாலைகளில் இறங்கி, களப்பணியாற்றியது, நாட்டின் எல்லைகளில் பணியாற்றும், ராணுவ வீரர்களை நினைகூட்டியது. மக்கள் சமூகம் எதிர்கொள்ளும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், அரசின் துறைத் தலைவர்கள், பெருநகர ஆணையர், மேயர் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல் பட்டு வெற்றி பெற்றிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, பாராட்டி வாழ்த்து கிறது. மாண்டஸ் புயல் காற்றில் உயிரிழந் துள்ளோர் குடும்பங்களுக்கும், பயிர் களை இழந்து நிற்கும் விவசாயிகள், வாழ்விடம் உள்ளிட்ட வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கும் போது மான நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.