அகமதாபாத், மே 9- அதானி குழும நிறுவனங்களில் ஒன் றான அதானி பவர் நிறுவனத்தின் (Adani Power Limited) லாபம், கடந்த மூன்று மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள் ளது. அதானி பவர் நிறுவனத்தின் லாபம், 2020-21 நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ. 13 கோடியாக இருந்த நிலையில் 2021-22 நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி - மார்ச்) ரூ. 4 ஆயி ரத்து 646 கோடியாக அதிகரித்துள்ளது. இது சுமார் 357 மடங்கு அதிகமாகும். ஒட்டு மொத்த நிதியாண்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதானி பவர் நிறுவனத்தின் லாபம் ரூ. 4 ஆயிரத்து 912 கோடியாக அதிகரித்துள்ளது. இது சுமார் 287 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 3 மாதங்களில் அதானி நிறு வனத்தின் ஒட்டு மொத்த வருமானம் 93 சதவிகிதம் அதிகரித்து ரூ. 13 ஆயிரத்து 308 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த நிதியாண்டில் அதானி பவர் நிறுவனத்தின் வருமானம் ரூ. 31 ஆயி ரத்து 686 கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, நாட்டின் வடமேற்கு பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இந்தியாவில் மின் சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதே அதானி பவர் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கக் காரணம் என அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள் ளது.
“இந்தியாவின் எரிசக்தி தேவை யை மலிவு விலையில் பூர்த்தி செய்ய அதானி நிறுவனம் உறுதியாக உள் ளது” என்று அதானி தெரிவித்துள்ளார். நிலக்கரியைத் தோண்டி எடுப்பதி லும், அதனை போதிய அளவு இருப்பு வைப்பதிலும், மோடி அரசு மிகுந்த அலட்சியமாக நடந்து கொண்டது. இத னால், நாட்டின் மின்னுற்பத்தி கடுமை யாக பாதிக்கப்பட்டு, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க் கண்ட், ஹரியானா, பீகார், தெலுங் கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநி லங்களில் நாளொன்றுக்கு குறைந்தது 3 மணிநேரம் முதல் அதிகபட்சம் 7 மணி நேரம் வரை கடுமையான மின் தட்டுப் பாடு நிலவி வருகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்கி றோம் என்ற பெயரில், அதானி போன்ற தனியார் மின் உற்பத்தியாளர்களிடமி ருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது அதானி நிறுவனத்திற்கு அபரிமிதமான லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. விலைவாசி உயர்வு மூலம் மக்கள் மீது மேலும் மேலும் ஏற்றப்படும் சுமைக ளையே, அதானி போன்ற பெருமுத லாளிகள் மேலும் மேலும் தங்களுக்கான லாபமாக மாற்றி வருகின்றனர்.