states

உலகச் செய்திகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அடமா பர்ரோ வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தல் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைவரான எர்னஸ்ட் பாய் கொரோமா, “நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் என்றால் அது ஒரே ஒருவர்தான். காம்பியாவின் மக்கள் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மியான்மரில் ஜனநாயகத்தை மீட்கப் போராடி வரும் ஆங் சான் சுகிக்கு வழங்கப்பட்ட நான்கு ஆண்டு  சிறைத்தண்டனையை இரண்டு ஆண்டு தண்டனை யாகக் குறைத்துள்ளனர். கொரோனா தொற்றுக்காலக் கட்டுப்பாடுகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய நான்கு ஆண்டுகாலத் தண்டனையை ராணுவத்தால் நியமிக்கப் பட்ட அரசு இரண்டு ஆண்டுக்காலத் தண்டனையாகக் குறைத்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் தனி நாடு கோரி நீண்டகாலமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கு ரஷ்யாவின் ஆதரவு இருக்கிறது. எட்டு ஆண்டு காலமாக நடந்து வரும் சண்டையை நிறுத்த, ரஷ்யா வுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப் போதுதான் தீர்வு கிடைக்கும் என்று உக்ரைன் ஜனாதி பதி விளாடிமிர் செலன்ஸ்கி கூறியுள்ளார். தற்போது ரஷ்ய-அமெரிக்கப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் விவகாரம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.