சென்னை, அக். 7- ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 500 கோடி ரூபாய் துபாயில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகக் கூறி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 2,438 கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுதொடர்பாக பாதிக் கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விசார ணைக்கு ஆஜராகுமாறு ஆர்கே சுரேஷுக்கு பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்கே சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக வில்லை. சுமார் 10 மாதங்களாக துபாயில் தலைமறைவாக உள்ள ஆர்கே சுரேசுக்கு இதுவரை பல முறை சம்மன் அனுப்பப்பட் டுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 500 கோடி ரூபாய் துபாயில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சொத்துக் களை முடக்க துபாய் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் போடப்பட் டுள்ள நிலையில், அதை உடனடி யாக அமல்படுத்த மீண்டும் பொரு ளாதார குற்றப்பிரிவு காவல் துறை யினர் கடிதம் எழுதியுள்ளனர். சொத்துக்களை முடக்க துபாய் நாட்டு அரசுடன் எம் லாட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலை யில், இதுவரை மோசடி செய்த பணத்தில் வாங்கிய பல கோடி மதிப்பிலான 127 சொத்துக்களை கண்டறிந்து, 60 சொத்துக்களை முடக்கியுள்ளனர். 102 கோடி வங்கி கணக்கை முடக்கி, 6.5 கோடி பணம், 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மேலும் துபாயில் பதுங்கியுள்ள அதன் இயக்குநர்களை கைது செய்ய இன்டர்போல் உதவியு டன் காவல் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.