states

பல ஆயிரம் கோடி மோசடி ‘நியோ மேக்ஸ்’ நிறுவன அலுவலகங்களில் அதிரடி சோதனை

மதுரை, ஜூலை 25- பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகாரில் சிக்கிய நியோ மேக்ஸ்’ நிறுவன அலுவலகங்களில் ஜூலை 25 அன்று பொருளாதார குற்றத் தடுப்பு காவல்துறையினர்  அதிரடி சோதனை நடத்தினர்.  விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு ‘நியோ-மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனம் ஆசை வார்த்தைகளை கூறி, வாடிக்கையாளர்களிடம் ரூ.5,000 கோடிக்கு மேல் பணம் வசூலித்து ஏமாற்றியதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. நெல்லை நிறுவன இயக்குநர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில்  ‘நியோ- மேக்ஸ்’ மற்றும் அதன் தொடர்புடைய மதுரையிலுள்ள ‘நியோ மேக்ஸ் ’ டெவலப்பர், லைவ் ஸ்மார்ட் பிராப்ரட்டி, ரியல்டர்ஸ், எக்ப்ரோ ரிடைல், லைவ் பிரைடு பிராப்ரட்டி, சென்சூரியன், வென்டுரா பிராப்ரட்டி ஆகிய நிறுவனங்கள் மீதும், விருதுநகரில் சபோரோ பிராப்ரட்டி, அட்லாண்டினோ டெவலப்பர் நிறுவனம், திண்டுக்கல் முத்து நகரிலுள்ள லூமை பிராப்ரட்டிஸ், காரைக்குடி 100 அடி சாலையிலுள்ள ரிபேகோ பிராப்ரட்டி, மற்றும் நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ரீகேஷன் பிராப்ரட்டி, தேனி - பழைய ஸ்ரீராம் தியேட்டர் அருகே அஸ்டோனீஸ் பிராப்ரட்டி, கம்பத்தில் மிலைனோ டெவலப் பர்ஸ், திருவாரூர் கீழ வீதி யிலுளள லிபர்டைல்ஸ் நிறுவன அலுவலகங்களில் அந்தந்த  மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை யினர் ஜூலை 25 அன்று சோதனை நடத்தினர். மதுரையில் டிஎஸ்பி குப்புசாமி தலைமையில் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.