சென்னை, ஜூலை 9- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதசாஹூ ஆலோசனை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் கள், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க அங்கீகரிக் கப்பட்டவராவார். கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரின் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வாக்காளர் அட்டையு டன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியைத் தொடங்க தேர்தல் ஆணை யம் முடிவு செய்துள்ளது.
அதனால், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் கள், வாக்குச்சாவடி அளவிலான அலு வலர்களை வீடு வீடாக அனுப்பி, வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்களை படிவம் 6-பி வழியாகப் பெற வேண்டும். இப்படிவம் கையில் கிடைத்த 7 நாட்களுக்குள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக, கருடா மென்பொருள் வழியாகவோ, வாக்காளர் பதிவு அலுவலர்கள் இஆர்ஓநெட் மூலமாகவோ பதிந்து, டிஜிட்டல் மயமாக்க வேண்டும். குறு அளவில் சிறப்பு முகாம்களை அமைத்தும் ஆதார் எண்களைப் பெறலாம். ஆதார் எண்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்ட ஆட்சி யர்கள், வாக்காளர் பதிவு அலுவலர் கள் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி களை மாவட்டம் மற்றும் தொகுதி அளவில், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.