states

குஜராத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண் ஆணவக்கொலை

காந்திநகர், ஜூன் 27- குஜராத் மாநிலத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை அவரது உறவுக்கார இளை ஞன் கொலை செய்துள் ளான்.  குஜராத் மாநிலம் சூரத்  மாவட்டம் லிம்பயத் பகுதி யைச் சேர்ந்தவர் கல்யாணி  (20). இவரும் ஜிதேந்திர சொனாவானி (24) என்பவ ரும் கடந்த மாதம் காதல் திரு மணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு கல்யாணியின் குடும்பத்தி னர் எதிர்ப்பு தெரிவிக்கவே  எதிர்ப்பை மீறி நீதிமன்றத் தில் ஜிதேந்திராவை கல் யாணி பதிவுத்திருமணம் செய்துகொண்டார். இதைத்  தொடர்ந்து மணமகன் ஜிதேந்திராவின் குடும்பத்தி னர் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களின் திருமணம் செவ் வாயன்று நடைபெறுவதாக இருந்தது.  இந்நிலையில், லிம்பயத் பகுதியில் உள்ள ஜிதேந்திரா வின் வீட்டிற்கு திங்கட் கிழமை மாலை கல்யாணி யின் உறவுக்கார இளைஞர் ஹிமந்த் சொனாவானி (வயது 24) சென்று, கல்யாணி மீது  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.  இதனால் கல்யாணியின் அலறல் சத்தம் கேட்ட அக் கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்  துவமனையில் அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பல னின்றி கல்யாணி உயிரிழந் தார். குடும்பத்தின் எதிர்ப்பை மீது திருமணம் செய்த இளம் பெண்ணை ஆணவக்  கொலை செய்த கொலை யாளி ஹிமந்த் சொனாவானி யை காவல்துறையினர் கைது செய்தனர்.