states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாகிஸ்தானின் பெஷா வர் மசூதியில் தொழுகை யின் போது நிகழ்ந்த தற் கொலைப்படை தாக்கு தலில் 46 பேர் பலியாகிய நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்துள்ளனர். தற் கொலைப்படை தாக்குத லுக்கு பாகிஸ்தான் தலி பான்களின் தளபதி சர்பகஃப் முகமந்த் பொறுப்பேற்றுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செவ்வா ய்க்கிழமை தொடங்கு கிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவை களின் கூட்டுக் கூட்டத் தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை யாற்றுகிறார். பழைய நாடாளுமன்ற கட்டடத் திலேயே பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கு கிறது. 

மணிப்பூர் மாநிலம் ஷிருய் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான அளவில் நிலநடுக்கம் என்பதால் பெரிய அளவு  சேதம் ஏற்படவில்லை.

நாட்டில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலை யில், மகாராஷ்டிர மாநி லம் தானே மாவட்டத்தில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி  வேலை தேடும் 7 பேரிடம் சுமார் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தில்லிக்குச் செல்ல விஜயவாடாவிலி ருந்து தனி விமானம் மூலம் கிளம்பினார். விமானம் கிளம்பிய சில  நிமிடங்களில் தொழில் நுட்ப கோளாறு காரண மாக மீண்டும் விஜய வாடாவிலேயே தரை யிறக்கப்பட்ட நிலையில்,  தில்லி பயணத்தை ஜெகன்மோகன் ரத்து செய்தார்.

உலகக்கோப்பை தோல்வி காரணமாக இந்திய ஹாக்கி அணி யின் பயிற்சியாளர் கிர ஹாம் ரெய்ட் (ஆஸ்திரே லியா) தனது பதவியை ராஜினாமா செய்தார். ஒடிசாவில் நடைபெற்ற 15வது சீசன் உலகக் கோப்பையில் இந்தியா 9வது இடத்தைபிடித்தது.

இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் குண்டுவீசிய கணேசன் என்பவரை போலீ சார் கைது செய்தனர்.

உலகச் செய்திகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபசோவில் முகா மிட்டுள்ள தனது படைகளை ஒரு மாத காலத்திற்குள் விலக்கிக் கொள்ள பிரான்ஸ் முடிவெடுத்திருக்கிறது. தற்போதைய பர்கினோ ஃபசோ அரசு, பிரான்சின் படைகள் வெளியேற வேண்டும் என்று அறிவித்ததோடு, அதிகாரப்பூர்வமாகக் கடிதமும் அனுப்பியது. படைகள் வந்தபோது போடப்பட்ட உடன்பாட்டின்படி, ஒரு மாத கால முன்னறிவிப்பு தேவைப்படுகிறது. இதன்படி, கடிதம் கிடைத்த ஒரு மாத காலத்தில் வெளியேறுவதாக பிரான்ஸ் கூறியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் மந்த நிலையைத் தவிர்த்துவிட முடியும் என்று ஜெர்மனி அரசு எதிர்பார்க்கிறது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் தடைகளை அப்படியே ஆதரித்து நின்றதால் எரிபொருள் தட்டுப்பாடு ஜெர்மனியில் ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, தொழிற்சாலைகள் இயக்கம் பாதிப்பு உள்ளிட்டவற்றால் பொருளாதாரத்தில் சரிவு கண்டது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் 2023 ஆம் ஆண்டில் மந்தநிலை உருவாகாது என்று தற்போது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

புதிதாக சிறிய அணுமின்சார உலைகளை அமைப்பது பற்றி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் ஆலோசித்து வரு கிறது. அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அரசு அணுமின்சக்தி நிறுவனமான வாட்டன்ஃபால் உலையை அமைக்கத் தயாராகி யுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் இந்த சிறிய அணுமின் உலைகள் மூலமாக 2 ஆயிரத்து 800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. 2023 ஆம் ஆண்டுக்குள் புதிய உலைகளை அமைக்கப் போகிறார்கள்.