states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரி சமத்துவபுரம் அரசு விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.  இதில் தரங்கம்பாடி வட்டம், கரு விழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் ஸ்தபதியின் மகன் ரிஷிபாலன் (17). இவர் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வியாழனன்று காட்டுச்சேரி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற  தடகளப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் ரிஷி பாலன் கலந்து கொண்டார். போட்டியில் ஓடிக் கொண்டிருந்த போது, பாதியிலேயே மயங்கி விழுந்த அவரை பள்ளி  ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ரிஷி பாலன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொறையார் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர். உடற்கூராய்வுக்காக வியாழனன்று நள்ளிரவு, ரிஷிபால னின் உடலை பொறையார் மருத்துவ மனையிலிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.  இந்நிலையில் மாணவனின் இறப்பு க்கு உரிய நீதி கேட்டு உறவினர்கள் மருத்துவமனை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம் நீட்டிப்பு

வீடு மற்றும் பொது மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாமை செப்டம்பர் 25 வரை நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் இணைப்புகளில் பெயர் மாற்றம்  செய்ய ஏதுவாக கடந்த ஜூலை 24 முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங் களை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான 726 ரூபாய் (ரூ.615+GST ரூ.111) செலுத்தி இந்த “சிறப்பு பெயர்  மாற்றம் முகாம்” மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு களில் பெயர் மாற்றம் செய்து கொள்ள லாம்.  தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

நடிகை மரண வழக்கை 6 மாதங்களில் முடிக்க உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்  தொடர்பான வழக்கின் விசாரணை யை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தி ற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா  கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை யில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் சட லமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கின் விசாரணையை சென்னை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை வெள்ளி யன்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்து ள்ளதாகவும், வழக்கில் 67 சாட்சிகளி டம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக வும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசார ணையை மாற்ற மறுத்த நீதிபதி, வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

மசோதாக்களுக்கு  இந்திப் பெயர்:  நிலைக்குழுக் கூட்டத்தில் எதிர்ப்பு

ஒன்றிய பாஜக அரசு 3 சட்ட மசோதாக் களுக்கு இந்தியில் பெயர் வைத்து ள்ளதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இந்திய தண்டனைச் சட்டம், குற்ற வியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டத்துக்கு பதில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 சட்டங் களுக்கு பதில் பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, சாட்சிய மசோதா என ஒன்றிய பாஜக  அரசு இந்தியில் பெயர் வைத்துள்ளது. சட்ட மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் வைத்துள்ளது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 348-க்கு எதிரானது. மசோதாக்களுக்கு இந்திப் பெயர் வைத்துள்ளதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் திமுக எம்.பி., தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்து. 3 பக்க கடிதத்தை அளித்தார்.  கருணை  மனுக்கள் மீது குடியரசுத் தலைவர், ஆளு நர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கா ததற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தயாநிதிமாறன் எம்.பி., கூறுகையில், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் 36 மசோதாக்கள் பற்றி உள்துறை செயலாளர் அஜய் பல்லா விளக்கிக் கூறினார். இந்தி பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் மசோதாக்களை எதிர்க்கிறோம் என்றார். 

செந்தில் பாலாஜியின்  நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை, ஆக. 25- போக்குவரத்துக் கழகத் தில் வேலை வாங்கித் தரு வது தொடர்பான வழக்கில் புழல் சிறையில் அடைக் கப்பட்டிருந்த செந்தில்  பாலாஜியை அமலாக்கத் துறையினர் ஆகஸ்ட் 7ஆம்  தேதி 5 நாட்கள் காவலில் எடுத்தனர். பின்னர் ஆஜர் படுத்தப்பட்ட அவரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது. இதனிடையே சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக  செந்தில் பாலாஜி வெள்ளியன்று (ஆக. 25) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற  காவலை ஆகஸ்ட் 28ஆம்  தேதி வரை நீட்டித்து நீதிபதி சிவக்குமார் உத்தர விட்டார். 

மதிப்பீட்டு தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்கள் 

சென்னை,ஆக,25- தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையி லான மாணவர்கள் தங்களது  கற்றல் திறனை அறிந்து கொள்வதற்கு மாதம் ஒரு முறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த  தேர்வுகளுக்கான வழிகாட்டு தல்களை பள்ளிக்கல்வித் துறை வெள்ளியன்று வெளி யிட்டுள்ளது. மேலும், தேர்வு களுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கு முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.