சென்னை,ஜூலை 31- சென்னை அமைந்தகரையை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 விழுக்காடு வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்த தாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் அரியலூர், மாவட்டம் இரவான் குடியை சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வந்த செந்தில்குமார் கடந்த 2 மாதமாக கோயம்பேடு சேமாத்தம்மன் நகரிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்தார். கடந்த 28 ஆம் தேதி காரில் வந்த மர்ம கும்பல் செந்தில் குமாரை கடத்தி சென்றது. மேலும் செந்தில்குமாரின் மனைவி சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கடத்தல் கும்பல் “செந்தில் குமார் மூலம் ஆருத்ரா நிறுவனத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப் பட்டுள்ளோம், இதனால் செந்தில்குமாரை கடத்தி வைத்து உள்ளோம். உடனடியாக எங்களுக்கு இழப்பீடு தொகை வேண்டும்” என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட சரண்யா கடத்தல் கும்பல் கூறியபடி காஞ்சி புரம் தனியார் மருத்துவ மனை அருகே சென்று காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கடத்தல் கும்பல் அங்கு வர வில்லை என்று தெரிகிறது. கணவர் செந்தில்குமாரின் செல்போ னும் ‘சுவிட்ச் ஆப்’செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா, கண வர் கடத்தப்பட்டது குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகி றார்கள். இதுவரை செந்தில் குமார் பற்றி எந்த தகவலும் காவல்துறைக்கு கிடைக்க வில்லை. அனைத்து காவல் நிலையங்க ளுக்கும் தகவல் தெரிவித்து அவரை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.