சென்னை,செப்.14- அர்ச்சகர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனையையும் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் மகளிர் உரிமைத்திட்டத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் சென்னை யில் செப்டம்பர் 13,14 ஆகிய தேதி களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
வரவேற்கத்தக்க மாற்றம்
தமிழ்நாட்டில் உள்ள கோயில் களில் அர்ச்சகர் நியமனத்தில் சாதிப் பாகுபாட்டிற்கு முடிவுகட்டும் நோக்கத் துடன் ‘அனைத்து சாதியினரும் அர்ச்ச கர்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது அந்த திட்டத்தின் மூலம் 3 பெண்கள் அர்ச்சகர் கல்வியை முடித்து பணியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் அர்ச்சகர் பணியில் நிலவி வந்த பாலின பேதத்திற்கும் முடிவுகட்டப்படும் என்ற செய்தி பெருமகிழ்ச்சி தருகிறது. தமிழ்நாட்டில் ‘அனைத்து சாதியின ரும் அர்ச்சகர்’ ஆகலாம் என்ற உத்தரவு கடந்த 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப் பட்டது. இருப்பினும் அந்த திட்டம் நடை முறைக்கு வருவதற்கு பல்வேறு தடை கள் எழுந்தன. இந்த நிலையில் கேர ளத்தில், அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர், பெண் அர்ச்சகர் நியமனங் கள் சாத்தியமாகின. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனம் பெற்று அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிராக தொடுக்கப் பட்ட வழக்குகள் முறியடிக்கப்பட்டன. இந்த நிலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த ரம்யா, ரஞ்சிதா மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய பெண்கள் தேர்ச்சி பெற்று அர்ச்சகர் பயிற்சியை தொடங்கவுள்ள செய்தி வந்துள்ளது. மேலும், 15 பெண்கள் அர்ச்சகர் படிப்பில் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர் என்றும், இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் ஏராளமான கோயில்களில் பெண் அர்ச்சகர்கள் பணியை தொடங்குவார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியும் வந்துள்ளது. இதன் மூலம், அர்ச்சகர் பணியில் நிலவிவந்த சாதி வேறுபாடுகளோடு, பாலின பேதமும் அகலத் தொடங்கி யிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். உறுதியோடு செயல்பட்டு இந்த மாற்றத்தை சாத்தியமாக்கியுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழ்நாடு அரசிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டை முன்னோக்கிச் செலுத்தும் இதுபோன்ற புரட்சிகரமான மாற்றங்களை மக்கள் கொண்டாடி வரவேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலின சமத்துவ நோக்கில் முன்னேறுவோம்!
இன்றைய சமுதாய உற்பத்தி முறை யில், பெண்களின் வீடு சார்ந்த உழைப்பு பெரும் பங்கு செலுத்துகிறது. விவசாய மாக இருந்தாலும், தொழிலாக இருந்தா லும் அதற்கு தேவையான மனித வளத்தை உருவாக்குவதும், வளர்த் தெடுப்பதும், பராமரிப்பதும் பெண் களின் பணியாகவே உள்ளது. ஆனால், அதன் மதிப்பு பொருளாதாரத்தில் கணக் கிடப்படுவதில்லை. பெண்களை,வீட்டு உழைப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற முயற்சியை முதன் முதலில் முன்னெடு த்தது சோசலிச அரசாங்கமே. அவ்வாறு வீட்டு உழைப்பில் இருந்து பெண்களை விடுவிக்க முடி யாதபோது, வீடுசார் உழைப்பிற்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாய மானது. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையும் இதனை தொடர்ந்து பேசி வருகிறது. ஆனாலும், உலகம் முழுவதும் அரசாங்கங்கள் இதனை ஏற்று நடவடிக்கைகள் எடுப்பது குறைவே. இந்த சூழலில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி யான ‘மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ இன்று முதல் அமலுக்கு வருகிறது. முன்னோட்டமாக நேற்றே பல மகளிருக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அளவில் பெற்று பலனடையும் இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தும் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்டுள்ள மகளிர் மேல் முறையீடு செய்யலாம் என அறிவித்திருப்பது நல்ல அம்சமாகும். மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறுவோர் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல் மேலும் விடுபட்டுள்ள வர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கிடும் வகையில் சில நிபந்தனைகளை தளர்த்திட அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.