வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை,செப்.3- சென்னை உட்பட பல பகுதிகளில் ஞாயிறன்று கனமழை பெய்தது. இந்நிலையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை க்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் புறநகர் ரயில் தடம்புரண்டு விபத்து
தில்லி பைரன் மார்க் அருகே புற நகர் ரயிலின் பெட்டி ஒன்று ஞாயி றன்று காலை தடம்புரண்டு விபத் துக்குள்ளானது. ரயில் தடம்புரண்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என் றும், பயணம் செய்த பயணிகள் அனை வரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ரயில்வே காவல் துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ட வாளத்தில் இருந்து பெட்டியை அகற்றிய பின்பு ரயில் போக்குவரத்து இயல்புநிலையை அடைந்தாலும், தில்லியில் ரயில் விபத்து ஏற்படுவது மிக மிக அரிதான சம்பவம் என்பதால், ரயில் தடம்புரண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டிற்காக 207 ரயில் சேவை ரத்து
ஜி-20 உச்சி மாநாடு தில்லியின் ப்ரகதி மைதானத்தின் பாரதி மண்ட பத்தில் செப்.9,10 ஆகிய நாட்க ளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற் காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய 3 நாட்களுக்கு 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், 36 ரயில்கள் குறுகிய காலத்திற்கு மட்டும் இயக்கப்படும் என ரயில்வேதுறை அறி வித்துள்ளது. ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு ஏற்கெனவே 400-க்கும் மேற் பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.