states

உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது

மதுரையைச் சேர்ந்த பொறியாளர் ரெங்கன் என்பவர் தாக்கல் செய்த  மனுவில், ‘‘தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாத புரம் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை யில் 152 அடி வரை நீர் தேக்கலாம். ஆனால்  152 அடி வரை தேக்க முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியா ளர்கள் முல்லைப் பெரியாறு அணையை வல்லக்கடவு நிலப் பாதை வழியாகச் சென்ற டைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 23 மரங்  களை வெட்டுவது உட்பட பேபி அணையை  பழுதுபார்க்கவும் மற்றும் பலப்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் வல்லக்கடவு நிலப்பாதை வழி யாக முல்லைப் பெரியாறு அணையை  அடைந்து அணையை வலுப்படுத்துவதற் காக, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.  இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட னர்.