states

கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் புரியும் பட்ஜெட்!

சென்னை, பிப்.1- ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள  பட்ஜெட் பெரும்பான்மை மக்களின் நலன்களை புறக்கணித்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம்  புரியும் பட்ஜெட்டாகவே உள்ளது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விவசாயிகள், தொழிலாளர்கள், இளை ஞர்கள், கிராமப்புற மக்கள் என அனைத்து பகுதி யினரும் மிகக் கடுமையான பொருளாதார மற்றும் வாழ்வாதார பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அவற்றை கணக்கில்  கொண்டு நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.  ஆனால், வழக்கம்போல் வெற்று பெருமையா லும் தனக்குத்தானே முதுகில் தட்டிக் கொண்டும் கடந்த கால பெருமைகளை பேசிக் கொண்டி ருப்பதாகவே பட்ஜெட் உள்ளது.

இந்தியா பட்டினிக் குறியீட்டில் அண்டை நாடு களை விட மோசமான நிலையில் இருப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டிலும் மிக மோசமாக இருப்பதை கணக்கில் கொண்டு கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கும், உணவு பாது காப்பு திட்டத்திற்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நகர்ப்புறத் திற்கும் வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட் டத்தை விரிவுபடுத்தியிருக்க வேண்டும். இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு மானியம் கடந்த ஆண்டை விட குறைக்  கப்பட்டிருக்கிறது. அதேபோன்று மதிய உணவு  திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 800 கோடியும், கிரா மப்புற மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்  டின் உண்மையான செலவை விட ரூ. 5 ஆயிரம் கோடி குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு  ஆண்டில் ஒன்றரை கோடி பேருக்கு வேலை உறுதியளிப்பு சட்டத்தில் வேலை மறுக்கப்பட்ட போதிலும், 4500 கோடிக்கு அதிகமான தொகை  கடந்த ஆண்டில் நிலுவையாக இருக்கும் நிலை யிலும்,  ஒன்றிய அரசு இந்த பட்ஜெட்டில் கடந்த  ஆண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி ஒதுக்கப் பட்ட ரூ. 89,400 கோடியை விட ரூ. 29,400 கோடி  குறைத்து, ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு  செய்துள்ளது. மோடியின் 2வது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் ஒதுக்கிய மிகக் குறைவான தொகை இதுவாகும்.

கொரோனா பேரிடரால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கும் நிலை யில் அதை மேம்படுத்திட கூடுதலான தொகை  ஒதுக்குவதற்கு பதிலாக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து மிகச் சொற்ப மான தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது. பண  வீக்கத்தை கணக்கில் கொண்டால் இந்த தொகை  கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. கொரோனா காலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு தேவை யான அளவிற்கு இல்லை என்பதை உணர்த்தி யுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத் திற்கு 2 சதவிகிதம் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்  பட்டிருந்த நிலையில் அதை முழுமையாக செலவு செய்யவில்லை என்பதோடு அதையே காரணமாக்கி இந்த ஆண்டு சுகாதாரத்திற்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை புறக்கணித்த பட்ஜெட்

                தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்ப் பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு முக்கியமான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.  தமிழ்  நாடு புறக்கணிக்கப்படுகிறது. இந்தியா இந்த நூற்றாண்டில் வலுமிக்க நாடாக வரும் என்பதற்கான அடிப்படையாக இளைஞர்களின் எண்ணிக்கை 50 சதவிகி தத்திற்கு மேல் உள்ள நிலையில் வேலை யின்மை உச்சத்தில் உள்ள நிலையிலும், எந்த வித வேலைக்கான ஒதுக்கீடும் பட்ஜெட்டில் இல்லை. இந்திய அரசு வேலை வாய்ப்பு அளிப்பதை கைகழுவி விட்ட நிலையில் சிறு-குறு நடுத்தர  தொழில்களே உள்ளூர் அளவிலான பொருளா தார நடவடிக்கைகளுக்கும், வேலை வாய்ப்பு களுக்கும் ஆதாரமாக உள்ள நிலையில் சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான எந்த வொரு உருப்படியான திட்டத்தையும் இந்த அரசால் முன்வைக்க முடியவில்லை.

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்ப் பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு முக்கியமான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.  தமிழ்  நாடு புறக்கணிக்கப்படுகிறது. இந்தியா இந்த நூற்றாண்டில் வலுமிக்க நாடாக வரும் என்பதற்கான அடிப்படையாக இளைஞர்களின் எண்ணிக்கை 50 சதவிகி தத்திற்கு மேல் உள்ள நிலையில் வேலை யின்மை உச்சத்தில் உள்ள நிலையிலும், எந்த வித வேலைக்கான ஒதுக்கீடும் பட்ஜெட்டில் இல்லை. இந்திய அரசு வேலை வாய்ப்பு அளிப்பதை கைகழுவி விட்ட நிலையில் சிறு-குறு நடுத்தர  தொழில்களே உள்ளூர் அளவிலான பொருளா தார நடவடிக்கைகளுக்கும், வேலை வாய்ப்பு களுக்கும் ஆதாரமாக உள்ள நிலையில் சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான எந்த வொரு உருப்படியான திட்டத்தையும் இந்த அரசால் முன்வைக்க முடியவில்லை.
 

 

;