வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாநி லத்தில் தாகியா யங் என்ற கருப்பின கர்ப்பிணிப் பெண்ணை அமெரிக்க காவல்துறை சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இது மீண்டும் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டி காவல்துறையின் கொலை வன்முறை க்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கைகளை எழுப்பியுள்ளது. யங் கடையில் திருடியதால் துப்பாக்கியை பயன்படுத்தினோம். அதில் அவர் இறந்துவிட்டார் என காவல்துறையினர் அப்பெண் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த துப்பாக்கிச்சூட்டில் யங்கின் வயிற்றில் இருந்த குழந்தையும் கொலை செய் யப்பட்டது. ஆனாலும் அந்த கொலைகாரர்களின் விவரங்கள் கசிந்து விடாமல் அமெரிக்க அரசு பாதுகாக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் இன வெறியின் வெளிப்பாடு என யங் கின் குடும்பத்தி னர் கூறியதை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2020 ஆம் ஆண்டு கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு பின்பு அமெரிக்க காவல் துறையின் கொலை வன்முறைக்கு எதிராக அமெரிக்க மக்களின் கடும் எதிர்ப்புகளைக் தெரி வித்து போராடினர். அந்நாட்டு வழக்கறிஞர்களும் கருப்பினத்தவருக்கு எதிரான இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அமெரிக்க காவல்துறையின் கொலை வெறி குறையவில்லை.